என் புருஷன் கிட்ட கேட்குறே.. ஸ்ருதியை விளாசிய ஜாய் கிரிசல்ட்டா
மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் கிரிசில்டா விவாகரத்தில் புதிய திருப்பமாக ஸ்ருதி போட்ட பதிவிற்கு பதில் கொடுக்கும் வகையில், ஜாய் கிரிசில்டா வெளியிட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.
தமிழ்நாட்டின் ஃபேமஸ் சமையல் கலைஞராக வலம் வரும் இவர், பலருக்கு சமைத்து போட்டுக் கொண்டிருக்கிறார்.
சினிமா பிரபலங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சமையல் கலையில் அசத்துபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த அளவுக்கு அவர்களுக்கு பரிச்சயமானவராக இருக்கிறார்.
இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். குக்கூ படத்தின் இயக்குநரான ராஜுமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த இந்த படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறவில்லை.

இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
கணவருக்கு ஆதரவாக பேசும் ஸ்ருதி
இந்த விவாகரத்திற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு எந்தவித பதிலும் கொடுக்காமல் இருந்த நிலையில் திருமண மோசடி புகார் தொடர்பான விசாரணை முதல் மனைவியுடன் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்திற்கு வந்திருந்தார்.
இதனை தொடர்ந்து இருவரும் மாறி மாறி அவர்கள் பக்கங்களில் இருக்கும் நியாயங்களை வெளிக்காட்டும் வகையில் காணொளிகள் மற்றும் அறிக்கைகளை பகிர்ந்து கொண்டனர். பிரச்சினை ஆரம்பித்து பல மாதங்கள் கடந்து வந்த வேளையில் வாய் திறக்காத ஸ்ருதி முதல் முறையாக தன்னுடைய கணவருக்கு சார்பாக பேசியிருக்கிறார்.

அதில், “என்னுடைய கணவர் மாதம்பட்டி ரங்கராஜிடம் இருந்து பணம் பறிப்பதே ஜாய் கிறிஸ்சில்டா அவர்களின் நோக்கமாக பார்க்கப்படுகிறது. ஜாய் கிறிஸ்சில்டா எங்கள் இருவரையும் பிரிக்க நினைக்கிறார்.
ஸ்ருதியை விளாசிய ஜாய் கிறிஸ்சில்டா
ஜாய் கிறிஸ்சில்டா விவகாரத்தில் என்னுடைய கணவர் ரங்கராஜிக்கு ஆதரவாக கடைசி வரை நிற்பேன். சட்டப்பூர்வ மனைவியான என்னுடைய குடும்பத்தினரை ஜாய் கிறிஸ்சில்டா மோசம் செய்யப் பார்க்கிறார்...” என பேசியிருக்கிறார்.
இந்த பதிவிற்கு சரியான பதிலடிக் கொடுத்த ஜாய் கிறிஸ்சில்டா, என்னுடைய கணவர் வாங்கிய கடனை திருப்பி கொடுப்பதற்காக நான் பணம் கேட்கிறேன். அதனால் உங்களுக்கு என்ன? நான் பிரச்சினை சென்றுக் கொண்டிருக்கும் பொழுது நிறைய தடவை உங்களை தொடர்பு கொண்டேன். ஆனால் நீங்கள் எந்த பதிலும் கொடுக்கவில்லை. மாறாக தற்போது வெளியிட்ட பதிவு எதற்காக?” என விளாசி பேசியிருக்கிறார்.
ஜாய் கிறிஸ்சில்டாவிற்கு ஆதரவாக கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகின்றன.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |