ஜாய் கிறிஸ்சில்டாவின் அதிரடியால் வாயை திறந்த முதல் மனைவி ஸ்ருதி- திணறும் ரங்கராஜ்!
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் கிறிஸ்சில்டா இருவருக்கும் இடையிலான விவாகரம் மீண்டும் சூடுபிடிக்கும் நிலையில், மற்றுமொரு வழக்கு பதிவின் பின்னர் முதல் மனைவி வாயை திறந்து பேசியிருக்கிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.
தமிழ்நாட்டின் ஃபேமஸ் சமையல் கலைஞராக வலம் வரும் இவர், பலருக்கு சமைத்து போட்டுக் கொண்டிருக்கிறார்.
சினிமா பிரபலங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சமையல் கலையில் அசத்துபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த அளவுக்கு அவர்களுக்கு பரிச்சயமானவராக இருக்கிறார்.
இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். குக்கூ படத்தின் இயக்குநரான ராஜுமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த இந்த படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறவில்லை.

இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
கணவருக்கு ஆதரவாக பேசும் ஸ்ருதி
இந்த விவாகரத்திற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு எந்தவித பதிலும் கொடுக்காமல் இருந்த நிலையில் திருமண மோசடி புகார் தொடர்பான விசாரணை முதல் மனைவியுடன் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்திற்கு வந்திருந்தார்.
இதனை தொடர்ந்து இருவரும் மாறி மாறி அவர்கள் பக்கங்களில் இருக்கும் நியாயங்களை வெளிக்காட்டும் வகையில் காணொளிகள் மற்றும் அறிக்கைகளை பகிர்ந்து கொண்டனர். பிரச்சினை ஆரம்பித்து பல மாதங்கள் கடந்து வந்த வேளையில் வாய் திறக்காத ஸ்ருதி முதல் முறையாக தன்னுடைய கணவருக்கு சார்பாக பேசியிருக்கிறார்.

அதில், “என்னுடைய கணவர் மாதம்பட்டி ரங்கராஜிடம் இருந்து பணம் பறிப்பதே ஜாய் கிறிஸ்சில்டா அவர்களின் நோக்கமாக பார்க்கப்படுகிறது. ஜாய் கிறிஸ்சில்டா எங்கள் இருவரையும் பிரிக்க நினைக்கிறார்.
ஜாய் கிறிஸ்சில்டா விவகாரத்தில் என்னுடைய கணவர் ரங்கராஜிக்கு ஆதரவாக கடைசி வரை நிற்பேன். சட்டப்பூர்வ மனைவியான என்னுடைய குடும்பத்தினரை ஜாய் கிறிஸ்சில்டா மோசம் செய்யப் பார்க்கிறார்...” என பேசியிருக்கிறார்.
சிபிசிஐடிக்கு மாற்ற வழக்க பதிவு
இதற்கிடையில், நேற்றைய தினம் குழந்தைகளுக்காக கொந்தளித்து காணாளி பதிவிட்ட ஜாய் கிறிஸ்சில்டா அவருடைய புகார் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதியவில்லை என்று கூறி மாதம்பட்டி ரங்கராஜ் விவாகரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக பதில் கொடுத்த காவல்துறையினர் எதிர்வரும் 12-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |