பிரபல தொழிலதிபர் திடீர் மரணம் - இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்
பங்குச் சந்தையில் பங்குகளின் முன்னோட்டத்தை கணித்து பிரம்மாவாக திகழ்ந்து வந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
மும்பை பங்குச் சந்தையில் பங்குகளின் முன்னோட்டத்தை கணித்து பிரம்மாவாக திகழ்ந்து வந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. இவரை இந்திய பங்குச் சந்தையில் இவரை பங்குச் சந்தையின் பிதா மகன் என்று அழைக்கப்படும் வாரன் பஃபெட் என்று அழைக்கப்படுவது உண்டு.
இந்நிலையில், தொடர் உடல் நலக்குறைவால் பாதிக்கபட்ட இவர் கிட்னி தொந்திரவு இருந்த காரணத்தினால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இவர் வர்த்தகர் மட்டுமின்றி சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆகவும் இருந்து வந்தார். நாட்டிலேயே பணக்காரர்களில் ஐவரும் ஒருவர்.
இவரது சொத்து மதிப்பு 5.8 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது காலை மும்பையில் இருக்கும் கேண்டி பிரீச் மருத்துவமனைக்கு காலை 6.45 மணிக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.