தேம்ஸ் நதியில் உலாவிய குட்டி திமிங்கலம்! என்ன நடந்தது தெரியுமா?
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள தேம்ஸ் நதியில் சிக்கிய குட்டித் திமிகலம் மீட்க்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் விடப்பட்டுள்ளது.
தேம்ஸ் நதியில் இருக்கும் உருளைகளுக்கு நடுவே மின்கே வகை குட்டித் திமிங்கலம் சிக்கியிருந்துள்ளது.
இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின்பிடி, அந்தப்பகுதிக்கு சென்ற லண்டன் துறைமுக அதிகாரிகள், தீயணைப்புத்துறையினர் உள்ளிட்டோர் உருளைக்குள் சிக்கியிருக்கும் திமிங்கலத்தை வெளியே எடுக்க முயற்ச்சி செய்துள்ளனர்.
திடீரென மீட்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிய மின்கே திமிங்கலம், தேம்ஸ் நதியின் அழமான பகுதியை நோக்கிச் சென்றுள்ளது. பின்னர் ஒருவழியாக திமிங்கலம் இருக்கும் பகுதியை மீட்பு படையினர் கண்டுபிடித்து பாதுகாப்பான பகுதியில் விட்டுள்ளனர்.