வெளியேறிய சிங்கப் பெண் இந்திரஜா சர்வைவருக்கு பின் போட்ட முதல் போஸ்ட்! கண்ணீர் சிந்த வைத்த நெகிழ்ச்சி
ஜீ தமிழ் சேனலில் செப்டம்பர் 12 ம் தேதி முதல் சர்வைவர் தமிழ் ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது.
சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்று வரும் இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் வழிநடத்தி வருகிறார் நேற்று நடைபெற்ற போட்டியில் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ஷங்கர் எலிமினேட் ஆனார்.
இதன் மூலம் பார்வதி நிகழ்ச்சிக்குள் ரீஎன்ட்ரி ஆகி உள்ளார். நிகழ்ச்சியில் இருந்து வெளியறே்றப்பட்ட இந்திரா, இன்று இன்ஸ்டாகிராமில் தனது முதல் பதிவை, சர்வைவரில் தான் பங்கேற்ற ஃபோட்டோக்களுடன் பகிர்ந்துள்ளார்.
உணர்ச்சிகரமான இவரின் பதிவை ஏராளமானவர்கள் லைக் செய்து வருகின்றனர். நேற்று இந்திரஜா எலிமினேட் ஆன போதும் பலர் அவரை, சிங்கப் பெண்ணே என பாராட்டி கமெண்ட் செய்திருந்தனர்.
இந்திரஜா தனது பதிவில், சர்வைவர் பயணத்தில் எனக்கு நீங்கள் அளித்த அன்பிற்கும் ஆதரவிற்கும் ரொம்ப நன்றி மக்களே.
நீங்கள் இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது. ஜீ தமிழ் சர்வைவர் டீமுக்கு எனது மிகப் பெரிய நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு தந்த குழுவினருக்கும் நன்றி.
என்னை நன்றாக வழி நடத்திய அர்ஜுன் சாருக்கும் நன்றி. எனது சக போட்டியாளர்கள் அனைவருக்கும் அடி மனதில் இருந்து நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
நீங்கள் தான் எனக்கு எனது ப்ளஸ் மற்றும் மைனசை கற்றுக் கொடுத்தீர்கள். என்னை அக்கறையுடனும் பார்த்துக் கொண்டீர்கள்.
எப்போதும் என் மீது நம்பிக்கை வைத்து என் உடன் இருக்கும் என் குடும்பத்தினருக்கு எனது அன்பான நன்றி.