Ilaiyaraaja: இசைஞானி இயைராஜாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்... இவரது பின்னணி என்ன தெரியுமா?
இளையராஜா இந்த வார்த்தைகள் தமிழ் இசை உலகை பொறுத்தவரை ஒரு மந்திரம். தன் இசைத்தந்திரங்களால் இவர் கொள்ளை கொள்ளாத இதயங்களே இல்லை என்று சொல்லலாம்.
தமிழ் திரையுலகிலும் தமிழ் இசை உலகிலும் இசைக்கு கடவுள் என்று கொண்டாடுவார்கள். சினிமா என்ற துறையையும் ஒரு இசையமைப்பாளர் என்ற பாத்திரத்தையும் தாண்டி ஏன் இந்த இளையராஜா கொண்டாடப்படுகிறார்.
அப்படி எதை இந்த இளையராஜா சாதித்துவிட்டார். இப்படி ஒரு சிலரின் மனங்களில் மட்டுமே கேள்வி எழலாம். ஏன் என்றால் ஒட்டுமொத்த கீழைத்தேச இசை உலகிற்கும் அவர்தான் ராஜா.
இந்தியாவின் சென்னையில் தேனி மாவட்டத்தின் பண்ணை புரத்தில் 1943 ம் ஆண்டு யூன் மாதம் 3 திகதி பிறந்தார். இந்த இசை உலகின் ராஜகிரீடத்தை சுமந்துகொண்டிருக்கும் ஞானதேசிகன் எனும் இளையராஜா.
82 ஆண்டுகளை கடந்தும் ஒரு இளைஞனைப்போல சுழன்றுவரும் இந்த இசை வாலிபனை பார்த்து அதிசயிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
எப்படி இவரால் இது எல்லாம் சாத்தியமாகிறது? அசாத்தியமான இசைவடிவங்களை சாத்தியமாக்கி அதையே சாதனையாக்கும் இசைஞானி.
உண்மையில் சொல்லப்போனால் கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளை தன்னுள் கட்டி வைத்திருக்கிறார். சுமார் 45 ஆண்டுகளுக்கு அதிகமாக ஒரு இசைப்பேரசனாக கீழைத்தேய இசையுலகை கட்டியாண்டு வருகிறார்.
1975 ல் திரையிசைத்துறைக்குள் காலடி வைதரதவர். இன்று 2025லும் வைத்த காலை அப்புறப்படுத்த முடியாத ஒற்றை ஆளுமையாக உலகையே தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார்
அண்ணக்கிளியில் ஆரம்பித்த இவர் இன்றுவரை நிற்கவே இல்லை. 1000 ற்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துவிட்டார். அசைக்கமுடியாத ஒரு அத்திவாரம் அது இனி ஒரு இசைக்கலைஞனால் தொட முடியாத சிகரம் அது.
கண்ணதாசன் வாலி வைரமுத்து என நீளும் பாடல் ஆசிரியர்களோடும், டிம் எம் சௌந்தர்ராஜன், ஜானகி, சுசீலா, யேசுதாஸ், பாலசுப்ரமணியம், ஹரிகரன், ஸ்வர்ணலதா என ஒரு நீண்ட பட்டியல் பாடகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமான இசையை வழங்கினார்
இசைஞாயின் இசையமைத்த பாடல்கள் இன்றும் பலருக்கு இரவு தூக்கத்தை கொடுக்கும் தாலாட்டாகவும் காயப்பட்ட மனதிற்கு மருந்தாகவும் தனிமையை போக்குவதாகவும் அமைந்துள்ளது.
இளையராஜா இசை
இளையராஜாவின் இசையால் பலர் கோபத்தை அடக்கி கொலைகாரர்களாக மாறாமல் இருக்கிறார்கள். இன்னும் பலர் தற்கொலை எனும் முடிவுக்கு செல்லாமல் தங்கள் சோகங்களை கடந்து செல்கிறார்கள் என சொல்லலாம்.
அவருடைய இசை தமிழ் ரசிகர்களின் நெஞ்சை வருடி விடுவது போல் அத்தனை மென்மையாக இருக்கிறது. இந்த இசை எத்தனையோ குணப்படுத்தமுடியாத வருத்தங்களுக்கே மருந்தாகியிருக்கிறது என்றால் அதை பற்றி சொல்லவும் வேண்டுமா?.
இளையராஜாவின் படைப்புகளை உதவாது என்று ஒருநாளும் ஒதுக்கிவிட முடியாது. குறிப்பாக மௌனராகம் படத்தின் பின்னணி இசை மூலம் காலம் கடந்த காதலை இன்றளவும் அந்த பாடல்கள் கடத்திக் கொண்டுதான் இருக்கின்றன.
உண்மையை சொல்லப்போனால் இளையராஜாவின் ஒரு பாட்டையாவது முணுமுணுக்காதவர்கள் தமிழிசையை ரசித்திருக்கவே முடியாது என்பது மட்டுமே நிதர்சனம்.
இன்று இளையராஜாவின் பிறந்த நாள் என்று உலகமே கொண்டாடித்தீர்க்கிறது. ஆனால் அவர் பிறந்தது ஜுன் மூன்றாம் திகதிதான். அந்த நாள் கருணாநிதியின் பிறந்த நாள் என்பதால் தான் பிறந்தநாளை ஜுன் 2ம் திகதி கொண்டாடத் தொடங்கிவிட்டார்.
இசை என்ற வார்த்தை இந்த உலகில் இருக்கும் வரை இளையராஜாவும் இருந்துகொண்டே இருப்பார் நம் இதயங்கள் தோறும்.
82 அகவைகள் கடந்த இந்த இசை இளைஞனுக்கு இசை உலகின் ராஜகிரீடத்தை சுமந்து வரும் கலைத்தாயின் காலப்புகழ் கொண்ட கலைஞனுக்கு ஐபிசி தமிழின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |