சிறுநீரக ஆரோக்கியம் தரும் வாழைத்தண்டு மோர்கூட்டு - எப்படி செய்வது?
வீட்டில் வாழைத்தண்டு இருந்தால் இதை வைத்து கூட்டு எப்படி செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.

வாழைத்தண்டு கூட்டு
நாம் ஆரோக்கியமாக இருக்க வீட்டில் ஆரோக்கியமாக சமைத்து சாப்பிட வேண்டும். தற்போது வெயில் காலம் என்பதால் தயிர் நன்றாக சாப்பிட வேண்டும்.
அந்த வகையில் வீட்டில் வாழைத்தண்டு இருந்தால் அதை வைத்து எப்படி மோர் கூட்டு செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
இந்த வாழைத்தண்டு மோர் கூட்டு சாம்பார் மற்றும் புளிகுழம்புடன் சாப்பிட அட்டகாசமான சைடிஷாக இருக்கும்.

தேவையான பொருட்கள்
- 1 வாழைத்தண்டு
- ½ கப்தயிர்
- 5 பச்சை மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- தேவையான அளவு உப்பு
அரைக்க
- ½ கப் துருவிய தேங்காய்
- 1 ஸ்பூன் சீரகம்
- 4 பச்சை மிளகாய்
- 1 ஸ்பூன் அரிசி மாவு
தாளிக்க
- 2 ஸ்பூன்தேங்காய் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- சிறிதளவு கறிவேப்பிலை
செய்முறை
முதலில் வாழைத்தண்டின் தோலை நீக்கி வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அதிஜல் உள்ள நாரை முழுவதுமாக நீக்கி இன்றும் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளலாம்.
பின்னர் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு கலந்த நீரில் மூழ்க வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு மிக்சியில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் மற்றும் அரிசி மாவு ஆகியவற்றைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மென்மையான அரைத்துக்கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சேர்த்து அதில் வாழைத்தண்டை போட்டு உப்பு போட்டு நன்றாக வேகவைக்கவும்.
வாழைத்தண்டு வெந்ததும் அரைத்து வைத்ததை நன்கு சேர்த்து கலக்கவும்.
இந்த கூட்டை தாளிக்க ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
கடுகு வெடித்ததும் இந்த தாளிப்பை வேக வைத்த கூட்டு மீது ஊற்றி நன்றாக கிள்ளரினால் மோர் கூட்டு தயார்.