இளநரையை செலவே இல்லாமல் கருப்பாக்கும் ஹேர் டை.. இந்த காய் மட்டும் போடுங்க
பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு இளநரை பிரச்சினை அதிகமாகவே இருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் எதுவென தேடி பார்த்தால் நாம் அன்றாடம் செய்யும் சிறு தவறுகள் தான் இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
அந்த வகையில் இரசாயன ஷாம்போ பாவனை, ஊட்டச்சத்து குறைபாடு, முறையான பராமரிப்பு இன்மை, இரத்தம் தொடர்பான பிரச்சினைகள், ஹார்மோன்கள் மாற்றங்கள், இரசாயன சாயம் பூசுதல் என காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.
இது தொடர்பாக ஆரம்பத்தில் பார்க்காவிட்டால் காலப்போக்கில் இளம் வயதில் முதுமை தோற்றம் காணப்படும். அப்பாயாயின், இளநரை உணவின் மூலம் கட்டுக்குள் வைக்கலாம். அப்படி இல்லாவிடின் ஹேர் டை செய்து போடலாம்.
கடைகளில் விற்பனை செய்யப்படும் ஹேர் டை சில சமயங்களில் நமது தலைமுடியை மேலும் வெள்ளையாக்கி விடலாம்.
இது போன்ற பக்க விளைவுகள் வராமல் இருப்பதற்கு வீட்டில் இயற்கையான முறையில் செய்யும் ஹேர் டை பற்றி பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நெல்லிமுள்ளி - 50 கிராம்
- கடுக்காய் - 50 கிராம்
- பவுடர் ரோஸ் வாட்டர்
ஹேர் டை தயாரிக்கும் முறை
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நெல்லிமுள்ளியை நன்றாக பவுடர் செய்து கொள்ளவும். அதனுடன் கடுக்காய் பவுடர் வாங்கி ஒரு கடாயில் போட்டு வறுத்தெடுக்கவும்.
ஹேர் பயன்படுத்துவதற்கு முதல் நாள் இரவு, இரண்டையும் பவுடர் செய்து கலந்து, ரோஸ் வாட்டர் போட்டு கலவை போன்று தயாரித்து வைக்கவும். மறுநாள் காலையில் எழுந்து குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் தலைமுழுவதும் தடவி, மசாஜ் செய்து அப்படி ஊற விடவும்.
அதன் பின்னர் குளிர்ந்த நீரில் தலைமுடியை கழுவிக் கொள்ளலாம். இப்படி வாரத்திற்கு இரண்டு தடவைகள் செய்தால் வெள்ளையாக இருக்கும் உங்கள் தலைமுடி கருப்பாக மாற ஆரம்பிக்கும்.
செம்பட்டையாக இருக்கும் தலைமுடி கூட மாற வாய்ப்பு உள்ளது. இதனால் எந்தவித பக்க விளைவும் வராது என மருத்துவர் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |