கோபத்தை உடனே கட்டுப்படுத்த வேண்டுமா? உங்களுக்கான பதிவு இதோ

By Vinoja Sep 17, 2023 09:30 PM GMT
Report

இன்று பலருடைய பிரச்னைகளுக்கும் புலம்பலுக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று கோபத்தை கட்டுப்படுத்த முடியாமை ஆகும். காதலுக்கு கண் இல்லை என்று சொல்லுவார்கள் அதுபோல கோபத்துக்கும் கண்கள் இருப்பதில்லை.கோபத்தை விட சிறந்த எதிரி எமக்கு வேறு யாரும் இருக்க முடியாது.

கோபத்தை கட்டுப்படுத்த தெரியாமல் எத்தனையோ பேரின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகியிருக்கிறது என்பது வருந்ததக்க உண்மை. உண்மையில் கோபம் ஒரு உளவியல் நோய் பொதுவாக மனிதர்கள் தங்கள் நினைத்த படியே எல்லாம் நடக்க வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாக இருப்பதே கோபத்திற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

கோபத்தை உடனே கட்டுப்படுத்த வேண்டுமா? உங்களுக்கான பதிவு இதோ | How To Control Anger

நாம் அனைவரும் நமக்கு பிடித்தமானவர்கள் நாம் சொல்வதை கேட்க வேண்டும் என நினைக்கிறோம். அது நடக்கவில்லை என்றால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. இது உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பாரிய மாற்றத்தை தோற்றுவிக்க கூடியது. இதன் காரணமாகவே எமக்கு கோபம் வருகிறது.

கோபம் வந்தவுடன் நாம் என்ன செய்கின்றோம், என்ன வார்த்தைகளை கொட்டுகின்றோம் என்பது எமக்கே தெரிவதில்லை. இதனால் பல விடயங்களை இழக்க நேரிடுகிறது. இன்னும் சிலருக்கு தாம் செய்த பிழைகளை ஏற்றுக்கொள்ளும் மனம் துளியளவும் கிடையாது.இதுவும் கோபத்திற்கு முக்கிய காரணம்.

கோபத்தை உடனே கட்டுப்படுத்த வேண்டுமா? உங்களுக்கான பதிவு இதோ | How To Control Anger

கோபத்தால் எடுக்கப்படும் தவறான முடிவுகள்

நாம் அனைவரும் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும் பல சமயங்களில் நாம் நினைத்தபடி எம்மாலேயே நடந்துக்கொள்ள முடிவதில்லை அப்படிருக்கும்போது பிறர் நாம் சொன்னதை அப்படியே கேட்க வேண்டும் என நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது புரியாத காரணத்தினாலேயே கோபத்தால் பல தவறான முடிவுகளை எடுத்து விடுகின்றோம். பின்பு யோசித்தால் சரிசெய்யவே முடியாத அளவுக்கு விளைவுகளை கோபம் ஏற்படுத்திவிடுகிறது.

கோபத்தை உடனே கட்டுப்படுத்த வேண்டுமா? உங்களுக்கான பதிவு இதோ | How To Control Anger

போர்க்களத்தில் ஆயிரம் வீரர்களை வென்றவனை விட கோபம் வரும் பொழுது தன்னை தானே அடக்கிக்கொள்பவனே சிறந்த வீரன். கோபத்தை அடக்குவது அதனை வலிமையான செயல். ஒரு வகையில் கோபத்திற்கு முக்கிய காரணமாக அமைவது "ஈகோ " நான்,எனது கருத்து,எனது மதிப்பு, எனது உரிமை என சிந்திப்பது தான்.

சிறுவர்களை உளவியல் ரீதியாக பாதிக்கும் இணையம்

சிறுவர்களை உளவியல் ரீதியாக பாதிக்கும் இணையம்


கோபம் உண்டாவதால் உடல் நிலையில் உடனே பாதிப்புகள் நேரும் உடல் இறுகும், நரம்புகள் புடைக்கும், இதயதுடிப்பு அதிகமாகும், மூச்சு விடும் வேகம் அதிகரிக்கும் இதனால் உடலில் சக்கரையின் அளவு வெகுவாக அதிகரிக்கும். இந்த கோபத்திற்கு காரணம் என்ன? சிலமணி நேரம் கழித்து சிந்தித்து பார்த்தால் சில அற்ப விடயங்களாக இருக்கும் ஆனால் உணர்ச்சி வசப்பட்டு வீணாக கோபப்பட்டிருப்போம்.

கோபத்தை உடனே கட்டுப்படுத்த வேண்டுமா? உங்களுக்கான பதிவு இதோ | How To Control Anger

கோபத்தை தடுக்க முடியவில்லை என்றால் கோபத்தின் தன்மையை கட்டுப்படுத்துங்கள். பல நேரங்களில் நாம் நம்மை சுற்றி கோட்டை கட்டிக்கொண்டு மூடிய மனதுடன் முடிவெடுத்து விடுகின்றோம். எதிரில் இருப்பவர் அத்தகையை எண்ணங்களுக்கு மாற்று கருத்து கொண்டிருக்கலாம் என்பதை மறந்து விடுகிறோம்.

கோபம் உடனே அடங்க செய்ய வேண்டியது என்ன?

வயதானவர்களுக்கு ஆரோகியமான உணவுகள் பிடிக்கும் என்றால் இறைய இளைஞர்களுக்கு பீட்ஸாவும், பர்கரும் பிடிக்கும். உங்களுக்கு தேநீர் பிடிக்கும் என்றால் இன்னொருவருக்கு கோபி பிடிக்கும் எல்லாவற்ருக்கும் காரணம் ஒவ்வொருவருக்கும் இடையில் விருப்பு வெறுப்பு மாறுப்படுவதுதான்.

உங்களுக்குள்ளது போன்று நான், எனது, எனக்கு பிடிக்கும் என்ற கருத்துக்கள் எதிரில் இருப்பவருக்கும் அதே அளவில் இருக்கு. நான் பெரியவன் நான் எடுக்கும் முடிவு சரியானது என்று நினைப்பதுதான் பல நேரங்களில் கோபத்திற்கு காரணமாகிறது. கோபம் அதிகம் உள்ளவர்கள் கோபத்தை மனதில் கொண்டிருப்பார்கள் இதனால் ஏற்படும் பாதிப்பு கோபம் உள்ளவர்களுக்கு தான்.

கோபத்தை உடனே கட்டுப்படுத்த வேண்டுமா? உங்களுக்கான பதிவு இதோ | How To Control Anger

கோபத்தை கட்டுப்படுத்த உள்நோக்கி உங்கள் கோபத்தை பாருங்கள் கோபம் உடனே அடங்கும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் கோபம் என்பது மூளையில் ஏற்படும் சிறிய குழப்பம் அவ்வளவுதான். அதை புரிந்துக்கொண்டால் போதும் கோபத்தில் இருந்து இலகுவில் விலகிவிடலாம்.

கோபம் உள்வர்களை சற்று ஆராய்ந்து பாருங்கள் அவர்களில் பலர் தன்னம்பிக்கை அற்றவர்கள். குடும்பத்தில், நிர்வாகத்தில் தங்களின் மதிப்பு, மரியாதை போவிடுமோ என்ற பயம் உள்ளவர்களாக தான் இருப்பார்கள். அந்த பயத்தினால் தான் அதிகம் கோபப்படுவார்கள்.

உரத்த குரலில் கோபத்தில் பேசுவார்கள் ஆனால் நிச்சயம் மனதளவில் கோழைகள். கோபத்தை பற்றி திருவள்ளுவர் குறிப்பிடுகையில் கோபத்தை விட மனிதனுக்கு கெடுதல் செய்யக்கூடியது உலகில் எதுவும் கிடையாது என்கிறார்.

எல்லோருக்கும் ஒரே மாதிரியான மனநிலை இருப்பதில்லை

கோபத்தை இல்லாதொழிக்க சிறந்த வழி ஒவ்வொரு நாளும் இன்று நான் கோபப்பட கூடாது என்று உறுதியாக இருங்கள் நீங்கள் கோபம் கொண்ட நாட்களை ஒரு குறிப்பேட்டில் பதியுங்கள் நீங்கள் தனியாக இருக்கும் போது அதனை எடுத்து படித்து பாருங்கள் உங்கள் மனம் தானாக மாற ஆரம்பிக்கும்.

உங்கள் வாழ்க்கை மாற வேண்டுமா? இதை கட்டாயம் செய்க

உங்கள் வாழ்க்கை மாற வேண்டுமா? இதை கட்டாயம் செய்க


ஓர் உண்மையை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான மனநிலை இருப்பதில்லை. நம்மை யாரும் புரிந்து கொள்ளவில்லை என எப்போதும் நம்மை பற்றியே சிந்திக்காமல் எதிரில் இருப்பவரை புரிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

கோபத்தை உடனே கட்டுப்படுத்த வேண்டுமா? உங்களுக்கான பதிவு இதோ | How To Control Anger

உங்கள் எண்ணங்களை எதிரில் இருப்பவர் சரியாக புரிந்துக்கொள்ளும் வகையில் சொல்லுங்கள் எதிரில் இருப்பவர் சரியாக புரிந்துக்கொண்டால் தான் நீங்கள் சரியாக சொன்னதாக அர்த்தம். கோபம் ஒரு உளவியல் நோய் இது மன அழுத்தத்திற்கு காரணமாக அமைகிறது.

எனவே கோபத்தை கட்டுப்படுத்த முயற்சியுங்கள் இல்லாவிடில் நாம் வாழ்வில் எதை அதிகம் விரும்புகின்றோமே அதையே கோபத்தால் இழக்க நேரிடும்.

கோபத்தோடு எழுகிறவன் நிச்சயம் நட்டத்தோடடே உட்காருகிறான். சில நிமிட கோபத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நிரந்தரமாக எதையும் இழந்துவிடாதீர்கள் ஆரோக்கியமானதும், மகிழ்ச்சியானதுமான வாழ்க்கைக்கு கோபத்தை தவிர்த்திடுங்கள்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  


2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US