மயக்க மருந்து கொடுத்து வேலைக்காரர் செய்த அசிங்கமான செயல் ! கண்டுபிடித்த கொரானா பாதித்த பெண்
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு வீட்டில் குஞ்சன் சர்மா என்ற 30 வயதான பெண்ணுக்கு கொரானா வந்ததால் அவரை வீட்டு தனிமையில் அடைத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் அந்த வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர் ஒருவர் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்.
அதன் படி கடந்த வெள்ளிகிழமையன்று அந்த வீட்டிலிருக்கும் ஷர்மாவின் கணவர் ,மாமியார் மற்றும் குழந்தைகளுக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.
அப்போது குஞ்சன் ஷ்ரமாவுக்கு கொரானா இருந்ததால் அவரிடம் சென்றால் வைரஸ் பரவும் என்ற அச்சத்தில் அவரின் அறைக்குள் செல்லவில்லை .
அதன் பிறகு அந்த வேலைகாரர் கொடுத்த பாலை குடித்த அனைவரும் மயங்கி விழுந்தனர் .பின்னர் அவரின் திட்டப்படி அந்த வீட்டிற்குள் பல கொள்ளையர்கள் பால்கனி வழியாக வீட்டினுள் வந்துள்ளனர்.
அப்போது கொராணா பாதித்த குஞ்சன் சர்மா பலர் வீட்டினுள் வருவதை பார்த்தார் .பிறகு அவர் கத்தி கூச்சல் போட்டார் .அப்போது அந்த வீட்டிலிருந்த சிறுவன் விழித்துக்கொண்டான் . அவனும் கொள்ளையர்களை பார்த்து கத்தியதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தார்கள் .அதை பார்த்த கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டனர் .
இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது .
பின்னர் போலீசார் வந்து அந்த கேமராவில் பதிவான காட்சியை கொண்டு அந்த வேலைக்காரனையும் அவரின் கூட்டாளிகளையும் கைது செய்ய தேடி வருகின்றனர்.