வழுக்கைத் தலையில் முடி கிடுகிடுனு வளர இந்த ஒரே ஒரு பொருள் போதும்.... இப்படி யூஸ் பண்ணுங்க!
அழகை மேம்படுத்திக் காட்டுவதில் தலைமுடி முக்கிய பங்காற்றுகிறது.
ஆனால் இந்த முடி உதிர்ந்து வழுக்கையானால், அது ஒருவரது அழகை எப்படி பாதிக்கும் என்பதை சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை.
வழுக்கையில் இருந்து மீள அற்புதமான இயற்கை வைத்தியங்களைக் கொடுத்துள்ளோம். இதில் ஒன்றை பயன்படுத்தி இழந்த முடியை பெறுங்கள்.
வெங்காயம்
வெங்காயத்தில் உள்ள சல்பர், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தைத் தூண்டிவிடும். இதனால் வழுக்கைத் தலை பிரச்சனையைத் தடுக்கலாம். அதற்கு வெங்காயத்தை வெட்டி, அரைத்து சாறு எடுத்து, தேனுடன் கலந்து, ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
இது முடியின் வேர்க்கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு மட்டுமின்றி, பூஞ்சை மற்றும் பாக்டீரியா போன்றவற்றையும் அழிக்கும்.
தேங்காய் எண்ணெய்
இந்த எண்ணெய் முடியின் வேர்களுக்கு ஊட்டமளிக்கிறது. இரவு தூங்கும் முன் தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவி பத்து நிமிடம் மசாஜ் செய்து, மறுநாள் காலையில் தலைமுடியை அலசி வந்தால், அது முடியின் வளர்ச்சிக்கு உதவும்.
விருப்பமுள்ளவர்கள் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாற்றினையும் சேர்த்துக் கொள்ளலாம்.
தயிர்
தயிர் தலைமுடிக்கு ஒரு நல்ல கண்டிஷனராக செயல்படுகிறது. இது தவிர, தலைமுடி உதிர்வதைத் தடுத்து, வழுக்கையை நீக்குவதிலும் பெரிதம் உதவி புரிகிறது. அதற்கு தயிரை தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும்.
இதனால் ஒரு நல்ல பலனைப் பெறலாம்.