பொடுகை ஓட ஓட விரட்டும் அதிசய இலை!
பெண்களும் ஆண்களும் தற்போது பெரும் தொல்லையாக இருப்பது பொடுகு பிரச்சினை தான்.
பொடுகினால் முகப்பருக்கள் அதிகமாகும். நாளுக்கு நாள் பொடுகு அதிகரிக்குமே தவிர என்ன செய்தாலும் குறையாது.
இந்த பிரச்சினையிலிருந்து விடுபட வேப்பிலை பெரிதும் உதவுகின்றது.
சித்த மருத்துவத்தில் வேப்பிலைக்கு என்றே ஒரு தனியிடம் உள்ளது. வேப்பிலையால் பொடுகை ஓட விரட்ட முடியும். அது எப்படி என பார்க்கலாம்.
வேப்பிலை நீர்
தேவையானவை
- வேப்பிலை - 2 கைப்பிடி
- நீர் - 1 லிட்டர்
- தேன் - 1 ஸ்பூன்
செய்முறை
நீரை நன்றாக கொதிக்க வையுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து அதில் 2 கைப்பிடி வேப்பிலையை போட்டு இரவு முழுவதும் அப்படியே ஊற விடுங்கள்.
மறு நாள் காலையில் வேப்பிலை வடிகட்டி அந்த நீரை பத்திரமாய் எடுத்து வையுங்கள்.
இப்போது ஊறிய வேப்பிலையை அரைத்து அதனுடன் தேன் கலந்து தலையில் பூசுங்கள்.
30 நிமிடங்கள் கழித்து தலையை அலசியபின் அந்த ஊறிய வேப்பிலை நீரால் இறுதியாக அலசுங்கள். பொடு தூர ஓடிடும்.