ஒரே நேரத்தில் சிக்கிய இரண்டு மீன்கள்... ஆனால் நடந்த விபரீதத்தைப் பாருங்க
நாரை ஒன்று ஒரே நேரத்தில் இரண்டு மீன்களை பிடித்துள்ள நிலையில், அதனை சாப்பிடும் முன்பு ஒரு மீன் பறிபோன காட்சி வைரலாகி வருகின்றது.
நாரையின் மீன் வேட்டை
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.
பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.
அந்த வகையில் இங்கு நாரை ஒன்று தனது பசிக்காக இரண்டு மீன்களை வேட்டையாடியுள்ளது. குறித்த காட்சியும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் பிரமிப்பில் ஆழ்த்தியது.
ஆனால் இதில் இறுதியாக ஒரு டுவிஸ்ட் காத்திருந்தது. நாரை தான் பிடித்த இரண்டு மீன்களை சாப்பிட முயற்சித்த போது, எங்கிருந்தோ வந்த egret வகையைச் சேர்ந்த மற்றொரு பறவை மீனை வழிபறி செய்துள்ளது.
குறித்த நாரையும் ஓரளவிற்கு போராடி இறுதியாக ஒற்றை மீனைப் பறிகொடுத்து, ஒன்றை மட்டும் உணவாக்கியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |