தமிழா தமிழா: டெயிலர் ஆக வெளிநாட்டுக்கு போய் ஆடு மேய்த்த நபர்! மனதை உருக்கும் சம்பவம்
இந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சியில், பலவருடங்கள் குடும்பத்தை விட்டுப்பிரிந்து வெளிநாட்டில் வேலை பார்த்தவர்கள் மற்றும் குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதம் நடைப்பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நபரொருவர் தான் வெளிநாட்டு வேலைக்கு டெயிலர் ஆக போனேன் ஆனால் அங்கு என்னை ஆடு மேய்க்க தான் வைத்தார்கள்.. நான் அங்கு மூன்று வருடங்களாக அனுபவித்த வேதனைகளை இப்போது நினைத்தாலும் அழுகை வருகின்றது என குறிபிட்டு அரங்கத்தில் கண்ணீர் விட்ட காணொளி இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.

தமிழா தமிழா
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக அறியப்படுகின்றது.
விஜய் தொலைக்காட்சியில், கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சியை ஒத்த பாணியில் நடைபெற்று வரும் இந்நிகழ்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது என்றால் மிகையாகாது.

பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் மேற்கொள்ளப்படுவது அனைவரும் அறிந்தது தான்.
இந்நிலையில், இந்த வாரம் பலவருடங்கள் குடும்பத்தை விட்டுப்பிரிந்து வெளிநாட்டில் வேலை பார்த்தவர்கள் மற்றும் குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதம் நடைப்பெற்றுள்ளது.

இதன் போது நபரொருவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று அனுபவித்த சொல்ல முடியாத துன்பங்களை இப்போது நினைத்தாலும் அழுகை வருகின்றது என குறிப்பிட்டு வெளிப்படையாக பகிர்ந்துள்ள பல விடயங்கள் பெரும் அதிர்ச்சியையும் வெளிநாட்டு வேலைகள் குறித்த பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |