காலை எழுந்தவுடன் நகங்களை இப்படி தேய்த்தால் போதும்! உடலில் நடக்கும் அதிசய நன்மைகள்
காலை வேளையில், யோகாவில் கைகளை குவித்து நகங்களை உரசும்போது உங்கள் மூளையின் நரம்புகள் தூண்டப்படுகின்றன. இரத்த ஓட்டம் உடல் முழுவதும் பாய்ச்சப்படுகிறது.
மேலும், நகங்களை உரசி தேய்ப்பது பாலாயாம் யோகா என்று அழைக்கின்றனர். இதுவும் ஒரு வகை யோகாதான். இப்படி நகங்களை உரசுவதால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பல நன்மைகளைப் பெற முடியுமாம்.
கைகளை குவித்து நகங்களை உரசும்போது உங்கள் மூளையின் நரம்புகள் தூண்டப்படுகின்றன. இரத்த ஓட்டம் உடல் முழுவதும் பாய்ச்சப்படுகிறது. தலையில் இரத்த ஓட்டம் சீராக பாய்வதால் முடியின் வேர்கள் உறுதியாக முடி வளர்ச்சி அதிகரிக்கிறது.
இதனை காலை வேளையில் செய்யும்போது உங்கள் நரம்புகள், தசைகள் இலகுவாகி வலுப்பெறுகின்றன. இதனால் உங்கள் டென்ஷன், பதட்டம் அனைத்தும் தீரும். பெரும் நிம்மதி கிடைக்கும்.
தலையில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் முடி வேர்கள் உறுதியாகி முடி வளர்ச்சி அதிகரிக்கும். முடி உதிர்வு பிரச்சனையும் இருக்காது. நல்ல வளர்ச்சி கிடைக்கும்.
முடி வளர்ச்சி மட்டுமன்றி முடியின் தரமும் சிறப்பாக இருப்பதால் இளமையிலேயே நரை முடி , முடி உடைதல், பொடுகு போன்ற பிரச்சனைகளும் இருக்காது.
இதயம் இரத்ததை சுத்தப்படுத்தி அதன் வேலையை சிறப்பாக செய்ய உதவுகிறது. இதோடு நுரையீரல் சுவாசமும் சீராகிறது.