கணவருக்கு அல்வா கொடுத்த ஹன்சிகா.... திருமணம் முடிந்ததும் செய்த முதல் வேலை
நடிகை ஹன்சிகா, திருமணம் முடிந்த பிறகு தன் காதல் கணவருக்காக சுவையான அல்வா செய்து கொடுத்து அசத்தி உள்ளார்.
சோஹைல் கதூரியா என்கிற தொழிலதிபரை நடிகை ஹன்சிகா கடந்த வாரம் திருமணம் செய்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா அரண்மனையில் பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் நடந்துமுடிந்தது.
கணவருக்கு அல்வா செய்த ஹன்சிகா
இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு தனது காதல் கணவருக்கு அல்வா செய்து கொடுத்துள்ளார்.
இது குறித்த புகைப்படத்தினை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் திருமணம் முடித்ததுமே அல்வா கொடுக்கின்றீர்களா என்று அவரை கலாய்த்து தள்ளியுள்ளனர்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.