கூந்தலை காடு போல வளர்க்கும் ஹேர் பேக்- தினமும் பயன்படுத்தலாமா?
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வெளிப்புற தோற்றத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்ய முடியுமோ, அவ்வளவு முயற்சிகள் செய்து தன்னை அழகாக வைத்துக் கொள்கிறோம்.
ஒரு சிலர் தங்களுடைய சருமத்திற்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இன்னும் சிலர் தலைமுடி ஆரோக்கியத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
தற்போது இருக்கும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக தங்களின் அழகை பார்த்துக் கொள்வது பெரும் போராட்டமாக உள்ளது.
தலைமுடி வெடிப்பு, தலைமுடி வறட்சி, தலைமுடி உதிர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
அப்படியாயின், தலைமுடியை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளும் பொழுது, நாம் எவ்வளவு வயதானாலும் இளமையாக தெரிவோம்.
அந்த வகையில், வலுவிழந்து உதிரும் நிலையில் இருக்கும் தலைமுடியை எப்படி ஆரோக்கியமாக பராமரிக்கலாம் என்பதையும், அதற்காக என்னென்ன வீட்டு வைத்தியங்களை செய்து பார்க்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தலைமுடி வலுவிழக்க காரணங்கள்
- அதிக அளவில் முடி உதிர்வதற்கு ஆரோக்கியமற்ற உணவுகள் தான் முக்கிய காரணமாக அமைகிறது.
- போதுமான அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு தலைமுடி உதிர்வு ஏற்படும்.
- 8 மணிநேரம் முறையாக உறங்க வேண்டும். தூக்கம் சரியாக இல்லாத போது தலைமுடி உதிர்வு ஏற்படும்.
- வெளிப்பூச்சாக சில ஹேர் பேக்குகளை பயன்படுத்தும் பொழுது தலைமுடி வலுவிழக்க வாய்ப்பு உள்ளது.
தேவையான பொருட்கள்
- பாதாம் பிசின்- 10 துண்டுகள்
- தண்ணீர் - தேவையான அளவு
- பழுத்த வாழைப்பழம் - 1
- எண்ணெய்- இரண்டு டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் பாதாம் பிசினை எடுத்து, தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, அதன் பின்னர் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். மீதம் இருக்கும் பாதாம் பிசினை பிரிட்ஜில் வைத்து அடுத்த முறை ஹேர் பேக் தயார் செய்யும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதனுடன் நடுத்தரமாக பழுத்த வாழைப்பழம் ஒன்றையும் சேர்த்து கொள்ளவும். ஏனெனின் இதில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளன. இது தலைமுடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.
வழக்கமாக தலைக்கு பயன்படுத்தும் எண்ணெய் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும். தற்போது ஹேர் பேக் தயார் நிலையில் உள்ளது. தலைக்கு குளிக்கும் முன்னர், வேர்க்கால்களில் படும்படி தடவி 15லிருந்து 20 நிமிடம் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
குளிக்கும் பொழுது நன்றாக ஷாம்பூ போட்டு நன்றாக அலசினால் தலைமுடி வலுவாக மாறி விடும். குளிப்பதற்கு முன்னர், தொடர்ச்சியாக வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் தலைமுடி உதிர்வு அதிகமாகும். அதே சமயம், தலையில் உள்ள பொடுகு பிரச்சினையும் குறைய வாய்ப்பு உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |