சீரியல் நடிகை நந்தினி உயிரிழப்பிற்கு காரணம் என்ன? எழுதிய கடிதத்தில் இருந்த உண்மை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் கௌரி சீரியல் நடிகை விபரீத முடிவை எடுத்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை நந்தினி
நடிகை நந்தினி பிரபல ரிவியில் கடந்த 2024ம் ஆண்டு முதல் கௌரி என்ற தொடரில், துர்கா மற்றும் கனகா என இரட்டை வேடத்தில் நடித்து வருகின்றார்.
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர், கன்னட சீரியல்கள் மூலம் நடிப்பை தொடர்ந்துள்ளார். தமிழில் இவர் அறிமுகமாகிய கௌரி என்ற சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை கொடுத்துள்ளது.
கௌரி சீரியல் படப்பிடிப்பு முதலில் பெங்களூரில் நடந்து வந்த நிலையில், தற்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் சென்னைக்கு வந்த கௌரிக்கு பிரேக் என்பதால் பெங்களூர் சென்று அறையில் தங்கியிருந்த நடிகை தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

காரணம் என்ன?
நடிகை நந்தினியின் தந்தை சமீபத்தில் இறந்துவிட்ட நிலையில் அவர் பார்த்த ஆசிரியர் வேலை கருணை அடிப்படையில் நந்தினிக்கு கிடைத்துள்ளது.
இதனால் குடும்பத்தினர் ஆசிரியர் பணிக்கு செல்வதற்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகின்றது. மேலும் நந்தினி வீட்டில் முதல் பிள்ளை என்பதால் அடுத்து உள்ள தங்கையையும் அவர் பார்க்கும் நிலை உள்ளது. இதனால் குடும்ப சுமை அதிகமாக இருந்துள்ளார்.
ஆனால் நந்தினியின் வீட்டில் திருமணத்திற்கு அழுத்தம் கொடுத்ததால் மனவேதனையில் இருந்ததாகவும், ஆதலால் தறதும் கடிதத்தில் கூறியுள்ளார். இதனால் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |