கூகுள் பே வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி- இனி அமெரிக்காவில் இருந்து பணம் அனுப்ப முடியுமாம்!
பெரும்பலான மக்கள் தற்போது ஆன்லைன் பேமண்ட்-யை அதிகமாக பணபரிவர்த்தனை செய்து வருகின்றனர்.
அதிலும், கூகுள் பே, போன் பே போன்ற ஆப்கள் பயனாளர்கள் ஏரளாம். மேலும் கூகுள் பே மூலம் இந்தியாவில் உள்ளவர்களுக்குள் மட்டுமே பணம் அனுப்ப முடியும் என்ற நிலையில் இருந்தது.
ஆனால், தற்போது கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் முயற்சியால் அமெரிக்காவிலிருந்தும் இந்தியாவிற்கு இனி பணம் அனுப்ப முயற்சி எடுத்துள்ளனர். இதற்காக, கூகுளே நிறுவனம் வெஸ்டர்ன் யூனியன் உள்பட ஒருசில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு இனி பணம் அனுப்பலாம் என்ற வசதி விரைவில் வரவுள்ளது.
அமெரிக்காவிலிருந்து பணம் அனுப்புபவர்கள் வெஸ்டர்ன் யூனியன் அல்லது வேஸ் மூலம் பணம் அனுப்பலாம் என்றும் இதில் பணம் அனுப்புபவர்களுக்கு மட்டுமே ஒரு சிறிய தொகை கட்டணமாக பெறப்படும் என்றும் பணம் பெறுபவர்களுக்கு முழு தொகையும் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வருடத்தின் இறுதிக்குள் இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளை தாண்டி உலகின் சுமார் 200 நாடுகளுக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதனால், இந்தியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது.