உங்களுக்கு பாத வீக்கம் இருக்கா? சூடு தண்ணீரில் காலை வைத்தால் போதும்
பாத வீக்கம் என்பது பொதுவாக நீண்ட நேரம் நிற்கும் போதும் கால்களை தொங்கவிட்டபடி உட்கார்ந்திருக்கும் போதும் ஏற்படும் பொதுவான ஒரு விஷயமாகும். ஏதாவது தீவிர நோயின் அறிகுறியாக இருந்தாலொழிய அதைப் பற்றி பெரிதாக கவலைப்பட தேவையில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
கர்ப்ப காலத்தில் பாத வீக்கம் ஏற்படுவது மிகவும் சாதாரணமான ஒரு விஷயமாகும். இருந்தாலும் அளவுக்கு அதிகமான வீக்கம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.
இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் பாதவீக்கம் தொடர்ந்து இருந்தால் நீங்கள் இந்த வீட்டு மருத்துவ சிகிச்சைகளை முயற்சி செய்து பார்க்கலாம்.
பாத வீக்கத்தில் இருந்து விடுதலை பெற உங்கள் கால்களை ஒரு பக்கெட் வெதுவெதுப்பான தண்ணீரில் கல் உப்பைப் போட்டு சிறிது நேரம் அப்படியே மூழ்கி வைத்திருங்கள். மிகவும் சூடான தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் ஏனென்றால் இது வீக்கத்தை அதிகரிக்கும்.
வீக்கம் குறையும் வரை ஒரு நாளில் இரண்டு முறை இந்த சிகிச்சையை தொடரவும். ஒரு சிட்டிகை உப்பு உங்கள் பாதங்களின் மீது அற்புதங்களை நிகழ்த்தி வலியில் இருந்தும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் தரும். அதிகபட்ச பயன்களை பெற உப்பின் தூய வடிவமான கல் உப்பை மட்டுமே பயன்படுத்துங்கள்.
வீக்கத்தை குறைப்பதற்கு மிகச்சிறந்த வழி கிரேப் ப்ரூட் எசன்ஷியல் ஆயில் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குளியல் தொட்டியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி அதில் சில துளிகள் கிரேப் ப்ரூட் எசன்ஷியல் ஆயிலை விட்டு தண்ணீரில் மூழ்கி ரிலாக்ஸ் செய்யுங்கள்.
மேலும் நீங்கள் ஒரு பக்கெட் வெதுவெதுப்பான தண்ணீரில் பாதங்களை நனைத்து வைக்கலாம். கிரேப் ப்ரூட் எசன்ஷியல் ஆயில் ஏராளமான ஆன்டிஆக்சிடன்ட் பண்புகளை கொண்டது. இது வீக்கத்தையும் வலியையும் குறைக்க பெருமளவில் உதவுகிறது.
இந்த நறுமண எண்ணெயில் இருக்கும் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் கர்ப்பகாலத்தில் பாத வீக்கத்தை குறைப்பதோடுநல்ல சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படுகிறது.