கோடைகாலத்தில் இந்த உணவுகளை எடுத்துக்காதீங்க.... விஷமாக மாறுமாம்
கோடைகாலத்தில் விஷமாக மாறும் மூன்று உணவுகள் குறித்தும், அவற்றை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கோடை காலத்தில் உணவு விஷமாக மாறும் வாய்ப்புகள் அதிகம். இந்த காலகட்டத்தில் பாக்டீரியாக்கள் விரைவாக வளரும் தன்மை கொண்டவை.
வெட்டிய பழங்கள், காலாவதியான தயிர், திறந்தவெளியில் வைக்கப்பட்ட சாப்பாடு, நீண்ட நேரம் வைத்திருந்த சாதம் போன்றவற்றில் பாக்டீரியாக்கள் வளர்ந்து, வயிற்றுப் பிரச்சினைகளை உருவாக்கலாம்.
கோழி/மாட்டிறைச்சி
இறைச்சியை முழுமையாக சமைக்காமல் அறைகுறையாக சமைத்தால் அது புட் பாய்சனை ஏற்படுத்தும். மேலும் இதில் ஈ கோலி, சால்மொனெல்லா போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கலாம். ஆதலால் இறைச்சியை சமைக்கும் போது நன்றாக வேக வைத்து சாப்பிடுவது அவசியமாகும்.
தர்பூசணி/முலாம்பழம்
இதே போன்று வெட்டி வைத்திருக்கும் பழங்களை 2 மணி நேரத்திற்குள் சாப்பிட்டுவிட வேண்டும். கோடையில் விரைவில் கெட்டுப் போவதுடன், இதில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களும் காணப்படுகின்றது. ஆகவே புதிதாக வெட்டிய பழங்களை மட்டுமே உண்ணுங்கள்.
சாதம்
இதே போன்று சாதத்தை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதால் ஃபுட் பாய்சன் ஏற்படும். சமைத்த அரிசியில் பாசிலஸ் செரஸ் என்ற பாக்டீரியா வளர்ந்து வயிற்றுப் போக்கு, வாந்தி போன்ற பிரச்சனையை ஏற்படுததுகின்றது. ஆதலால் சமைத்த உணவை 1 மணி நேரத்திற்குள் சாப்பிட்டுவிட வேண்டும்.
புட் பாய்சன் அறிகுறிகள்
உணவு விஷமாக மாறும் போது வயிற்றுப்போக்கு, தண்ணீர் போன்ற மலம் வரும். வாந்தி அல்லது குமட்டல், வயிற்று வலி அல்லது சுளுக்கு குறிப்பாக தொப்புளைச் சுற்றி இருக்கும்.
காய்ச்சல் அல்லது குளிர் நடுக்கம், தலைவலி அல்லது தசை வலி, உடல் சோர்வு அல்லது தளர்ச்சி, வாய் வறட்சி, சிறுநீர் குறைவு, மயக்கம், பார்வை மங்கல் அல்லது தசை பலவீனம் ஆகிய அறிகுறிகள் தென்படும்.
புட் பாய்சனை தடுக்க என்ன செய்யலாம்?
கைகளை அடிக்கடி கழுவுவது அவசியமாகும். மேலும் காய்கறி, பழங்களை நன்றாக கழுவி சமைக்க வேண்டும்.
உணவை முழுமையாக சமைத்து, குளிர்சாதனப் பெட்டியில் சரியாக சேமிக்கவும். வெளியில் திறந்து வைக்கப்பட்ட உணவை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |