எவ்வளவு சாப்பிட்டாலும் ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா? இதை சாப்பிடுங்க போதும்
மிகவும் ஒல்லியாக இருப்பவர்கள் 15 நாட்களில் உடை அதிகரிக்க குறிப்பிட்ட சில உணவுகளை சாப்பிட்டால் போதும்.

எடை அதிகரிக்க
தற்போது எல்லோரும் வாழ்க்கை முறை மாற்றத்தால் பல நோய்களுக்குள்ளாகிறார்கள். அதிலும் தற்போதைய நிலையில் எல்லோரும் தங்களை தாங்கள் கவனித்துக்கொள்ளாமல் வேலை செய்வதில் மட்டும் கவனமாக இருக்கின்றனர்.
இதனால் சாப்பாடு தண்ணீர் என்று எதையும் கவனிப்பதில்லை. சத்துள்ள சாப்பாடு நாம் சாப்பிடும் போது தான் நமது உடல் கட்டுகோப்பாக இருக்கும்.

அந்த வகையில் மிகவும் ஒல்லியாக இருப்பவர்கள் அவர்கள் சத்து்ள சாப்பாட்டை சாப்பிடாதன் காரணமாக அப்படி இருப்பார்கள்.
ஒரு சரியான உணவு முறையை கடைபிடித்தால் எப்படி ஒல்லியாக இருப்பவர் கூட எடையை அதிகரிக்க முடியும். அதன்படி 15 நாட்களில் எடை அதிகரிக்கும் உணவுமுறை பற்றி பார்க்கலாம்.

உணவுகள்
புரதம், கொழுப்பு
- உடல் தசைகள் வளர்ச்சியடைய நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் கட்டாயமாக புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதற்கு மீன் சிக்கன் உருளைகிழங்கு சோறு போன்ற உணவுகளை கட்டாயம் மதிய உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் ஸ்நாக்ஸ் சமூசா சேன்விச் போன்ற உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பால் சீஸ் தயிர்
- காலையில் உணவு உடுத்துக்கொள்ளும் போது அதில் நட்ஸ் மற்றும் பால் சீஸ் தயிர் பட்டர் போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் பால் மற்றும் வாழைப்பழம் ஒன்றையும் சாப்பிட வேண்டும். இவை காலையில் சாப்பிடுவது அவசியம். இதை விட்டு விட்டு பிஸ்கட் கட்லட் போன்ற துரித உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

உலர் பழங்கள்
- உடல் அமைப்பு மிகவும் மெலிவாக உள்ளவர்கள் உலர் பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இந்த உலர் பழங்களில் கலோரிகள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வேகமாக எடை அதிகரிக்க வேண்டும் என நினைப்பவர்கள் தினமும் உணவில் வெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். இதில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளது.
கலோரி பழங்கள்
- உங்களுக்கு பழங்கள் சாப்பிட ஆசை வந்தால் வாழைப்பழம், சப்போட்டா, பப்பாளி, சீத்தாப்பழம், கொய்யா மற்றும் அத்திப்பழம் போன்ற பழங்களை சாப்பிட்டால் அவை உடல் எடை அதிகரிப்பிற்கு உதவும். இந்த பழங்களில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சோளம், கொண்டைக்கடலை மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துகொள்ள வேண்டும்.

மேற்குறிப்பிட்ட ஐந்து விடயங்களை செய்தால் நீங்கள் 15 நாட்களில் உடல் எடையை அதிகரித்து பார்க்க மிகவும் அழகாகவும் தெரிவீர்கள். உங்கள் சருமமும் ஜொலிப்பாக மாறும்.
மேற்குறிப்பிட்ட உணவு முறையை கடைபிடிப்பதுடன் போதியவு தூக்கம் ஒருநாளைக்கு 15 நிமிடம் நடைப்பயிற்ச்சி,15 நிமிடம் எளிய முறை உடற்பயிற்ச்சி,தியானம் போன்றவற்றை செய்வது அவசியம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |