காலையில் எழுந்தவுடன் தலைச்சுற்றல் வருகிறதா? அப்போ இந்த நோய் இருக்கு
காலையில் எழுந்ததும் தலைச்சுற்றல் ஏற்பட்டு, பார்வை மங்கி, லேசாகத் தலைசுற்றி ஒரு சில நொடிகள் சமநிலையை இழந்தால், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இவை ஒரு தீவிர நோயின் அறிகுறி என கூறப்படுகின்றது.
தலைச்சுற்றல் எதனால் ஏற்படுகிறது?
காலையில் எழுந்ததும் உங்களுக்கு தலைச்சுற்றல், பார்வை மங்கல், அல்லது சில நொடிகள் சமநிலை இழந்த்தல், போன்ற பிரச்சனைகள் இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
சிலர் இந்த அறிகுறிகளுக்கு தூக்கமின்மை தான் காரணம் என நினைப்பார்கள். இது தினமும் அல்லது மீண்டும் மீண்டும் வருகிறது என்றால் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். இது உங்கள் உடல் உங்களுக்கு அனுப்பும் எச்சரிக்கை.

இரத்த அழுத்தம் குறைந்தது
காலையில் எழுந்ததும் தலை சுற்றுவற்கான காரணங்களுக்கு பொதுவாக பார்த்தால் அதற்கு குறைந்த ரத்த அழுத்தம் என கூறலாம். நாம் திடீரென படுத்து படுக்கையை விட்டு எழும்பும்போது நமது இரத்த அழுத்தம் சிறிது நேரம் குறையக்கூடும்.
இது மூளைக்கு இரத்த ஓட்டத்தை குறைத்து தலைச்சுற்றலை ஏற்படுத்துகிறது. இது ஆர்த்தோஸ்டேடிக் ஹைபோடென்ஷன் என்று அழைக்கப்படுகிறது. இது தினமும் காலையில் உங்களுக்கு வருகிறது என்றால் மிகவும் கவனம் தேவை.

உடலில் நீர் பற்றாக்குறை
இதற்கு மிக மிக முக்கிய காரணங்களில் ஒன்று நீரிழப்பு. படுக்கைக்கு செல்லும் முன் நாம் தண்ணீர் குடிக்காமல் படுத்தால் அதனால் நமக்கு சற்று நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. பகலில் குறைவாக தண்ணீர் குடித்தால், காலையில் தலைச்சுற்றல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
எனவே படுக்கையை விட்டு எழுந்தவுடன் நீங்கள் தண்ணீர் குடிப்பது அவசியம். அதிகமாக இல்லாமல் ஒரு கிளாஸ் குடித்தால் போதும்.

இரத்த சோகை
தலைசுற்றல் காரணத்திற்கு உடலின் இரத்த சோகை கூட ஒரு காரணமாக இருக்கலாம். உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்போது, மூளைக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது.
இது தலைச்சுற்றல், சோர்வு மற்றும் பலவீனத்திற்கு வழிவகுக்கும். இந்தப் பிரச்சனை குறிப்பாகப் பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்படும்.

தினமும் காலையில் தலைச்சுற்றலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
இந்த பிரச்சனையை தடுப்பதற்கு காலையில் திடீரென படுக்கையில் இருந்து எழும்ப கூடாது. முதலில் புரண்டு படுத்து, பின்னர் மெதுவாக உட்கார வேண்டும். இதன் பின்னர் சில வினாடிகள் காத்திருந்து, பின்னர் எழுந்து நிற்க வேண்டும்.
இது தவிர தினமும் நிறைய தண்ணீர் குடிக்கவும், சீரான உணவை உட்கொள்ளவும், வழக்கமான பரிசோதனைகளை கட்டாயமாக செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை இந்தப் பிரச்சனை தொடர்ந்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள். உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |