உங்க அப்பா இறந்துட்டாங்க! போனில் வந்த தகவலால் அதிர்ச்சியில் மயங்கி விழுந்த மகள்- அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் தந்தை இறந்த செய்தி கேட்டு, மகளும் மரணமடைந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
ராணிப்பேட்டை அடுத்த காரை நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (63), இவர் தனியார் ஷூ தொழிற்சாலையில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ரேணுகாதேவி திருமணமாகி தன் தந்தை வீட்டிலிருந்த படி ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தனியார் ஷூ தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
ஏற்கனவே மாரடைப்பு மற்றும் சுவாச பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த சம்பத்தின் உடல்நிலை கடந்த சில நாட்களாக மோசமாக இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை மூச்சுத்திணறல் ஏற்படவே, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இத்தகவல் அவரது மகளான ரேணுகா தேவிக்கு தெரிவிக்கப்பட்டதும், அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளார், உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரேணுகா தேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர், தந்தை இறந்த செய்தி கேட்டு மகளும் இறந்த சம்பவம் உறவினர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
