வைரத்தை யாரெல்லாம் அணியக்கூடாது தெரியுமா? அணிந்தால் உயிருக்கே ஆபத்தாம்
மிகவும் விலையுயர்ந்தாகக் காணப்படும் வைரங்கள் பெண்கள் அணியும் ஆபரணங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இவ்வாறான வைர கற்களை அணிவதிலும் பல சிக்கல் ஏற்படுகின்றது.
குறித்த வைரத்தினை யாரெல்லாம் அணியலாம் என்றும் யார் அணியக்கூடாது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
வைரமானது அழகை அதிகரிப்பது மட்டுமின்றி, உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும். நீரிழிவு நோய் அல்லது இரத்த சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டால் வைரத்தை அணியக்கூடாது.
ஜோதிடத்தின் படி 21 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே வைரத்தினை அணியலாம். மேலும் அது எவ்வளவு வெண்மையாக இருக்கின்றதா அவ்வளவு சிறந்ததாக பார்க்கப்படுகின்றது.
கறை படிந்த அல்லது துண்டாக்கப்பட்ட வைரம் விபத்து அல்லது தோல்விக்கு காரணமாக இருக்கலாம். பவளத்தை வைரத்துடன் சேர்த்து அணியக்கூடாது.
வைரத்தை ஆள்காட்டி விரல் அல்லது கட்டைவிரலில் அணிவது சுக்கிரனை பலப்படுத்துகிறது. இதனால் நிதி பிரச்சனைகள் நீங்கும். இது தவிர, கவர்ச்சி, திரைப்படம் அல்லது ஊடகத் துறையில் உள்ளவர்களுக்கு வைரம் பயனுள்ளதாக இருக்கும்.
மேஷம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் வைரம் அணிவது நல்ல பலன்களை தராது. இந்த ராசிக்காரர்கள் வைரம் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
மறுபுறம், கடக ராசிக்காரர்கள் குறிப்பிட்ட தசாபுத்தி நடக்கும்போது வைரத்தை அணியலாம். இருந்தபோதிலும், அவரவர் ஜாதகப்படி, வைரம் அணிவது பலனைக் கொடுக்கும் என்றால் அணியலாம்.
ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகளில் வைரம் மிகவும் மங்களகரமானது. இது தவிர ஆன்மீகத்தில் ஈடுபட விரும்புபவர்கள் வைரம் அணியக்கூடாது.
ஏனென்றால், சுக்கிரன் சுகபோகத்திற்கு அதிபதி, அவரின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ரத்தினத்தை அணிவது ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபடுவதை தடுக்கும்.