40 வயதை கடந்த பெண்களா நீங்கள்? இந்த பரிசோதனையை கட்டாயம் எடுத்துக்கே
இன்றைய காலத்தில் பெண்கள் அவசியமாக செய்து கொள்ள வேண்டிய சோதனைகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்வோம்.
பொதுவாக பெண்கள் வயது ஆக ஆக தங்களது உடம்பை அவ்வளவாக பார்த்துக் கொள்வதில்லை. ஆனால் இவ்வாறு அவர்கள் செய்யும் தவறுகள் நாளடைவில் மிகப்பெரிய நோய்த்தாக்கத்தினை ஏற்படுத்திவிடுகின்றது.
அதிலும் மார்பக மற்றும் கர்ப்ப வாய் புற்றுநோய்கள் அதிகமாகவே காணப்படுகின்றது.. இதற்காக ஒரு குறிப்பிட்ட வயதில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய பரிசோதனைகளை சரியான முறையில் எடு்க்கப்படுவதில்லை.

பெண்கள் செய்து கொள்ள வேண்டிய சோதனைகள்
உடல் எடை அதிகமாகிக் கொண்டிருந்தால் அதற்கான பரிசோதனையை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் 40 வயதுக்கு மேற்பட்ட காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கின்றது. இதனால் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்பட்டு நோய் பாதிப்பு ஏற்படுகின்றது.
முதலில், உடல் பருமனைத் தவிர்க்க பிஎம்ஐ மற்றும் ரத்த அழுத்த பரிசோதனையை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
ரத்த சோகை மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை உறுதி செய்ய ஹீமோகுளோபின், வைட்டமின் டி மற்றும் பி12 அளவுகளைச் சரிபார்ப்பது முக்கியம். குறிப்பாக, 30 வயதை கடந்த பெண்கள் மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.
45 வயதிற்கு மேற்பட்டோர் நீரிழிவு மற்றும் கொழுப்பின் அளவை கண்காணிக்க வேண்டும். மேலும், 60 வயதிற்கு மேல் எலும்பு அடர்த்தி குறைபாட்டை அறிய டெக்கா ஸ்கேன் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் பரிசோதனைகளை செய்துகொள்வது நல்லது.
சுற்றுச்சூழல் மாசு காரணமாக தோல் புற்றுநோய் அபாயம் அதிகரித்துள்ளதால், வருடத்திற்கு ஒருமுறை தோல் பரிசோதனையும் அவசியமாகிறது. இந்த முறையான பரிசோதனைகள் பெண்களின் நீண்டகால ஆரோக்கியத்திற்கு அடித்தளமாக அமையும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |