Ethirneechal: பணம் இல்லாமல் பரிதவிப்பில் நின்ற மருமகள்கள்... விசாலாட்சி செய்த காரியம்
எதிர்நீச்சல் சீரியலில் பணம் இல்லாமல் தவித்த மருமகள்களுக்கு தனது பணம் 70ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்து விசாலாட்சி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது மிகவும் சுவாரசியமாக செல்கின்றது. வீட்டு பெண்களை அடக்கி ஆண்ட குணசேகரன் தற்போது தலைமறைவாகி வருகின்றார்.
ஒருவழியாக மருமகள்களின் நிலையினை அறிந்த விசாலாட்சி மகன் மீது இருக்கும் தவறையும் தெரிந்து கொண்டார். இதனால் போலிசாரிடம் மகனைக் குறித்து வாக்குமூலமும் கொடுத்துள்ளார்.

தற்போது மருமகள்கள் ஹோட்டல் தொடங்குவதற்கு வண்டி ஒன்றினை ஏற்பாடு செய்து அனைத்து பொருட்களையும் வாங்கியுள்ளனர்.
இத்தருணத்தில் நபர் ஒருவர் வீட்டிற்கு வந்து பணம் கேட்டு பிரச்சனை செய்கின்றார். தற்போது பணம் இல்லாமல் மருமகள்கள் எதுவும் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
அப்பொழுது விசாலாட்சி மருமகள்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்று தான் சிறுவயதிலிருந்து சேர்த்து வைத்த பணம் ரூ.70 ஆயிரம் ரூபாயைக் கொடுத்துள்ளார்.
இது குணசேகரன் பணம் இல்லை... தான் எவ்வாறு இந்த பணத்தினை சேர்த்தேன் என்பதையும் தழுதழுத்த குரலில் கூறியுள்ளார். மாமியாரின் இந்த நிலையைக் கண்ட மருமகள்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |