Ethirneechal: தங்க தாம்பலத்துல வைத்து தாங்குவேன்... ஈஸ்வரியை நினைத்து அழும் விசாலாட்சி
எதிர்நீச்சல் சீரியலில் மருமகள் ஈஸ்வரியை நினைத்து விசாலாட்சி மனம்வருந்து அழும் காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் பெண்கள் விரும்பி பார்க்கும் சீரியலாக இருக்கின்றது. பெண்களை அடக்கி அதிகாரம் செய்த குணசேகரன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
குணசேகரன் கொடுத்த குடைச்சல்களை தகர்த்து எரிந்து வீட்டு பெண்கள், தற்போது வெற்றிகரமாக ஹோட்டலை நடத்தி வருகின்றனர்.

தற்போது அறிவுக்கரசியை வைத்து தனது திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ள நிலையில், ஒவ்வொரு முயற்சியும் மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
மீண்டும் கதிர் அறிவுக்கரசியை வைத்து ஜனனிக்கு கெடுதல் செய்வதற்கு முயற்சிக்கின்றார். இந்நிலையில் விசாலாட்சி தனது மருமகள் ஈஸ்வரியை நினைத்து மனம்வருந்தி கஷ்டப்படுகின்றார்.
வீட்டு பெண்கள் எவ்வாறு அடுத்தடுத்து சூழ்ச்சியினை எதிர்கொள்ளப் போகின்றனர் என்பதை இனிவரும் காட்சிகளில் எதிர்பார்க்கலாம்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |