விடுதலையானவுடன் ஆட்டத்தை ஆரம்பதித்த குணசேகரன்.. பதற்றத்தில் ஜனனி- இனி நடக்கப்போவது என்ன?
விடுதலையானவுடன் விட்டுச் சென்ற ஆட்டத்தை குணசேகரன் மீண்டும் ஆரம்பித்துள்ளார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது..
பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
ஆதி குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களுக்கு எதிராக செய்த கொடுமைகளுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அறைக்கப்பட்டார்.
அதன் பின்னர், வீட்டு தேவைகளுக்காக பணம் வேண்டும் என குணசேகரனிடம் பேசி, கதிர் அவருடைய மொத்த சொத்துக்களையும் அவர் பெயரில் எழுதி வாங்கியுள்ளார்.
இது ஒரு புறம் இருக்கையில், குணசேகரன் சிறையில் இருக்கும் பொழுது அவருடன் இருந்த ஒரு அறிவுக்கரசி குடும்பத்துடன் மகனுக்கு சம்பந்தம் பேசி, புது பிரச்சினையை வீட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
விடுதலையானவுடன் வேலையை ஆரம்பித்த குணசேகரன்
இப்படி இருக்கும் பொழுது, சிறையில் இருந்து வீட்டிற்கு வரும் குணசேகரனுக்கு ஆர்த்தி எடுப்பதற்காக மருமகள்கள் யாரும் வராத நிலையில், ஐஸ்வர்யா ஆர்த்தி எடுக்கச் செல்கிறார்.
அப்போது கதிர், ஆர்த்தி தட்டை தட்டி விட்டு, மருமகள்கள் ஆர்த்தி எடுக்க வேண்டும் என பிரச்சினையை ஆரம்பிக்கிறார்.
குணசேகரன் வெளியில் வந்தவுடன் வீட்டில் என்னென்ன நடக்கும் என்பதனை ஜனனி முன்னரே கணிக்கிறார்.ஜனனி கணிப்புப்படி சண்டைகள் மீண்டும் வெடிக்குமா? என்பதனை இனிவரும் எபிசோட்களில் பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |