வீட்டை விட்டு கிளம்பிய விசாலாட்சி.. அடுத்தடுத்து பிரச்சினைகளை சந்திக்கும் மருமகள்கள்- இனி நடக்கப்போவது என்ன?
எங்கு தேடியும் மகள் கிடைக்காததால் ரேனுகா நடுவீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது..
பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
ஆதி குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களுக்கு எதிராக செய்த கொடுமைகளை எல்லாம் போலீசிடமும் நீதிமன்றத்திலும் கூறி விட்டனர். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து வீட்டில் உள்ள பெண்கள் நால்வரும் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர். வீட்டின் சமையலறையில் மருமகள்களின் வாழ்க்கையை முடிக்க நினைத்த மாமியாரும் அடங்கி விட்டார்.
மருமகள்களின் செயலால் ஆத்திரமடைந்த ஞானமும், கதிரும் அவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் பெயில் கிடைக்க 6 மாதம் போராடி வருகிறார்கள். குணசேகரனை ஏமாற்றி கதிர் அவ்வளவு சொத்தை தன் பெயரில் எழுதி வாங்கியுள்ளார். இதனால் ஞானம் மனமுடைந்து இருக்கிறார்.
ரேனுகாவிற்கு வந்த சோதனை
இந்த நிலையில், சிறையில் இருந்து கொண்டு குணசேகரன் தர்ஷாவுக்கு சம்பந்தம் பேசி முடித்துள்ளார். இதில் குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் ஈஸ்வரிக்கு எதிராக தர்ஷா திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறுகிறார்.
கதிருடன் இணைந்து அப்பாவை வெளியில் கொண்டு வரும் முயற்சியில் இருக்கும் தர்ஷாவை கதிர் மனம் மாற்றம் செய்ய முயற்சி செய்து வருகிறார். இப்படியொரு நிலையில், ஞானம் பணம் கொடுக்க முடியாது எனக் கூறியதால் குழப்பமடைந்த ஐஸ்வர்யா மனம் உடைந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
[
ஐஸ்வர்யாவை காணவில்லை என வீட்டிலுள்ளவர்கள் பதற்றமாக தேடி வந்தார்கள். அவர் வீட்டில் தான் இருந்தார் என்பதனை பிறகு தான் தெரியவந்துள்ளது.
வீட்டை விட்டு செல்லும் விசாலாட்சி
இது ஒரு புறம் இருக்கையில், நந்தினி அவருடைய பிஷ்னஸை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார். ஆனால் ஈஸ்வரி அவருடைய வேலையில் சரியாக இருக்க வேண்டும் என நினைத்து அவருடைய நிறுவன உரிமையாளரிடம் நியாயம் கேட்க செல்கிறார்.
அத்துடன், நியாயம் கிடைக்காமல் போக மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கும் பொழுது விசாலாட்சி வீட்டை விட்டு செல்லும் முடிவுக்கு வந்துள்ளார்.
ஞானம் இதற்கு என்ன பதில் கொடுக்கப்போகிறார் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |