ஹனிமூன் கொண்டாட்டத்தில் தர்ஷன்- பார்கவி: பறிப்போகும் சக்தி உயிர்? உச்சக்கட்ட பரபரப்பு
வீட்டில் தர்ஷன் -பார்கவியின் ஹனிமூன் கொண்டாட்டம் சென்றுக் கொண்டிருக்கும் வேளையில், சக்தியின் உயிரை பறிப்பதற்கான வேலைகளை குணசேகரன் செய்து கொண்டிருக்கிறார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக கவர்ந்து வருகின்றது.
வீட்டிற்கு வாழ வந்த பெண்களை அடக்கி ஆழ நினைத்த குணசேகரன் அதற்காக பல வேலைபாடுகளை செய்து வந்தார். அவருக்கு அவரின் தம்பிகளும் அம்மாவும் துணையாக இருக்கிறார்கள்.
ஒரு சமயத்தில் மருமகள்களை அடக்க முடியாத குணசேகரன் மனமுடைந்த வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், தற்போது பொங்கி எழுது அடுத்தடுத்து புதுபுது திருப்பங்களை கொடுத்து வருகிறார்.
மற்றொரு புறம் ஜனனி குணசேகரன் கொடுத்த கெடு முடிவதற்குள் வீடியோ ஆதாரத்தினைக் கைப்பற்ற வேண்டும் என்ற வேலையினை பார்த்து வருகின்றார். மாடியில் வீட்டு பெண்கள் அனைவரும் இருந்து திட்டம் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஜனனி பேசியதை கரிகாலன் கேட்டு விடுகிறார்.

அதனை குணசேகரனிடம் கேட்க ஓடிய பொழுது தலையில் அடிப்பட்டு ஆதிரையை பற்றிய ஞாபகங்கள் வந்து விடுகிறது.
சக்தியை இழக்கும் ஜனனி
இந்த நிலையில், பெண்களை திசைத்திருப்புவதற்காக வீட்டுக்குள் வரவழைக்கப்பட்ட அன்புக்கரசி எப்படியாவது பார்கவியை பிரித்து விடலாம் என திட்டங்களை போட்டு வருகிறார்.
கடைசியாக தர்ஷன் பற்றி என்னிடம் தெரிந்து கொள் என பார்கவியிடம் கூற, அப்போது பார்கவிக்கு கோபம் வந்து விடுகிறது. இதற்கெல்லாம் முடிவுக்கட்ட நினைக்கும் ஜனனி தர்ஷன்- பார்கவி இருவருக்கும் வீட்டிலேயே முதல் இரவு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறார்.
இதனை எப்படியாவது தடுக்க நினைக்கும் அன்புக்கரசி, தர்ஷன் உடன் வீட்டில் எடுத்த புகைப்படங்களை அனுப்ப, அதனை பொருட்படுத்தாமல் தர்ஷன்- பார்கவியின் முதல் இரவு நடக்கிறது.

இது ஒரு புறம் சென்றுக் கொண்டிருக்கையில், சக்தியை கொலைச் செய்வதற்காக குணசேகரன் அனுப்பிய ஆட்கள் ஒருவழியாக சக்தியை பிடித்து அடிக்கிறார்கள். தன்னுடைய கணவரை காப்பாற்ற முடியாமல் ஜனனி வீட்டில் தவித்து போய் குணசேகரனிடம் நியாயம் கேட்க, அதற்கு குணசேகரன் பெரிதாக பதில் கொடுக்காமல் ஜனனியை தள்ளிவிட்டு செல்கிறார்.
கதைக்களம் வேறு விதமாக சென்றுக் கொண்டிருக்கிறது என சின்னத்திரை ரசிகர்கள் அச்சம் கொள்கிறார்கள். தன்னை இந்த உலகிற்கு காட்டிக் கொள்ள நினைத்த மருமகள்களுக்கு இப்படியொரு சோதனை வரும் என யாரும் நினைத்திருக்கமாட்டார்கள்.
சக்தி இறந்து விட்டால் தேவகி பற்றிய கதை வெளியில் வராமல் சென்று விடுமா? எனக் கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |