திருமணத்தை நிறுத்திய குணசேகரன்.. ஆடிப்போன அறிவுக்கரசி- மீண்டும் மலர்ந்த காதல்
என்ன நடந்தது என தெரியாமல் அறிவுக்கரசி நிற்கும் பொழுது குணசேகரன் அழைத்து திருமணத்தை நிறுத்திப்போவதாக கூறுகிறார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த குணசேகரன் தர்ஷனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளார். அதே சமயம், வீட்டிலுள்ள பெண்களையும் ஹோட்டல் தொழில் செய்வதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அறிவுக்கரசியின் பாதுகாப்பில் இருந்த தர்ஷன் மற்றும் ஊரை விட்டுச் சென்ற பார்கவி அவரது தந்தை அனைவரும் கொடைக்கானலில் ஜீவானந்திடம் சேர்ந்துள்ளனர்.
திருமணத்தை நிறுத்திய குணசேகரன்
இந்த விடயம் அறிவுக்கரசி மற்றும் குணசேகரன் குடும்பத்தினர் தெரிய வரும் பொழுது தர்ஷனை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என அடியாட்களை வைத்து முயற்சி செய்தனர். ஆனாலும் பலன் இல்லாமல் ஜீவானந்தம் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்.
இந்த விடயம் குறித்து ஜீவானந்தம், ஈஸ்வரிக்கு கோல் செய்து கூறும் பொழுது ஜனனியுடன் சேர்ந்த மருமகள்கள் குணசேகரனுக்கு செக் வைத்துள்ளனர்.
வீட்டில், திருமணம் நடக்கும் வரை கதைக்களம் ஒரே பரபரப்புடன் சென்றுக் கொண்டிருக்கிறது. கதிர், அறிவுக்கரசி இருவரும் தர்ஷனனை தேடி அழைந்து கொண்டிருக்கிறார். மாறாக இவர்கள் தேடும் தர்ஷன் மற்றும் அவரின் காதல் பார்கவி இருவரும் ஜீவானந்தம் இருப்பதால் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த சமயம் குணசேகரன் அழைத்து, ” உன்னுடைய தங்கைக்கு வேறு மாப்பிள்ளை பார்..” எனக் கூறி விட்டு கோலை வைத்து விடுகிறார். இந்த தகவல் கேட்ட அறிவுக்கரசி ஆடிப்போனதுடன், கதிரும் இனி என்ன செய்வது என புரியாமல் வீட்டிற்கு வந்த கேட்கும் பொழுது ஜனனி,“ அவருடைய மகன் விடயத்தில் அவர் முடிவு எடுக்கட்டும். யாரும் தலையிட வேண்டாம்..” என்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |