கைதான அறிவுக்கரசி.. பதறிப்போய் ஓடிய கதிர்- குணசேகரன் உதவிக்கு வருவாரா?
அதிரடியாக அறிவுக்கரசி கைது செய்யப்பட்டதால் கதிருக்கும் குணசேகரனுக்கு பயம் வந்துள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.
குடும்பத்தில் அடிமையாக இருக்கும் பெண்கள், அவர்களை அடக்கி ஆழ நினைக்கும் ஆண் ஆதிக்கம் கொண்ட கணவர்கள் என்ற கருப்பொருளை வைத்தே கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தன்னுடைய அண்ணன் குணசேகரனுக்காக தம்பிகள் தங்களின் மனைவிகளை வெளியில் அனுப்பியுள்ளனர். மரியாதை இல்லாத இடத்தில் இனி வாழ முடியாது என அவர்களும் கோயிலில் சென்று அமர்ந்திருக்கிறார்கள்.
அவர்களை வீட்டுக்குள் கொண்டு வர குணசேகரன் புது திட்டம் போட்டுள்ளார்.
அதாவது தன்னுடைய அம்மாவுக்கு விஷம் கொடுத்து அவரை படுத்த படுக்கையாக்கி, மருமகள்களின் நட்பை பிரிக்க நினைக்கிறார்.
கணவர்களுடன் சேர்ந்த மருமகள்கள்
இந்த நிலையில், மகனின் திருமணத்தை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் ஆட்டத்தை ஆரம்பித்த குணசேகரன் புதிதாக குந்தவை என்ற பெண்ணை சக்தியின் வாழ்க்கைக்குள் கொண்டு வந்துள்ளார்.
இதனால் சக்தி- ஜனனி இருவரும் தங்களுக்குள் இருந்த காதல் பிளவுப்பட்டு, தற்போது காதல் இருந்தும் வெளிக்காட்ட முடியாமல் வேதனையுடன் இருக்கிறார்கள்.
இப்படியொரு சமயம் பார்த்து, நந்தினி- கதிர், ஞானம்- ரேனுகா ஆகிய இரண்டு தம்பதிகளும் ஒன்று சேர்ந்துள்ளனர். ஆனால் ஈஸ்வரியும் ஜனனியும் தங்களின் வாழ்க்கையை தொலைத்து விட்டு தனியாக இருக்கிறார்கள். குணசேகரன் - ஈஸ்வரியுடன் இணைந்து வீட்டில் பூஜை செய்வதற்காக புதிய திட்டத்தை போடுகிறார்.
அதற்கு ஈஸ்வரியும் ஒப்புக் கொள்ள தர்ஷினிக்கு கோபம் வருகிறது.“இவருடன் இணைந்து பூஜை செய்யப்போகிறீர்களா?” என கேட்கிறார். இந்த சம்பவம் வீட்டில் வெடித்துக் கொண்டிருக்கும் பொழுது, அறிவுக்கரசி கைது செய்யப்பட்ட விடயத்தை படபடப்புடன் கதிர் குணசேகரனிடம் கூறுகிறார். அவரும் என்ன செய்வது என தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். அறிவுக்கரசி உதவிச் செய்ய குணசேகரன் முன் வருவாரா? என ரசிகர்களும் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |