Ethirneechal: போலிசாரால் துன்புறுத்தப்படும் வீட்டு மருமகள்கள்! அதிரடியாக எண்டரி கொடுத்த அப்பத்தா
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் செல்வாக்கை பயன்படுத்தி வீட்டு மருமகள்களை வெளியேற்ற நினைத்த நிலையில், தற்போது அப்பத்தா எண்ட்ரி கொடுத்து அதிரடி காட்டியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது மிகவும் சுவாரசியமாக செல்கின்றது. வீட்டு பெண்களை அடக்கி ஆண்ட குணசேகரன் தற்போது தலைமறைவாகி வருகின்றார்.
மருமகள்களுக்கு முழு ஆதரவை தெரிவித்துவரும் விசாலாட்சி, தான் திருமணத்திற்கு முன்பு சேர்த்து வைத்த பணத்தையும் மருமகள்களின் தொழில் முன்னேற்றத்திற்கு கொடுத்துள்ளார்.

வீட்டில் நடக்கும் ஒவ்வொரு செயலையும் அறிவுக்கரசி லைவ்வாக காணொளியை போட்டு குணசேகரனுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் ஆதங்கம் தாங்க முடியாத குணசேகரன் போலிசாரிடம் புகார் அளித்து மருமகள்களை அடித்து விரட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
போலிசார் அராஜகம் செய்து கொண்டிருந்த தருணத்தில் அப்பத்தா அதிரடியாக எண்ட்ரி கொடுத்து, குணசேகரன் பெயரில் வீடு இல்லை... தனது பெயரில் தான் வீடு உள்ளது என்று கூறி வீட்டு பெண்களைக் காப்பாற்றியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |