பதறியடித்து ஓடிய ஜனனி.. உயிருக்கு போராடும் சக்தி- குணசேகரனின் சதி வேலையா இது?
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி முத்துவின் லீலைகளை தெரிந்து கொள்ள சென்ற சக்தி குணசேகரனின் சதியால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
வழக்கமாக செல்லும் சீரியல் போன்று அல்லாமல் குறித்த சீரியலின் கதைகளம் சற்று வித்தியாசமாக செல்கின்றது. தர்ஷன் திருமணத்தில் ஆரம்பித்த அதிரடி ஆட்டம் சக்தி கொலைச் செய்யும் அளவுக்கு விறுவிறுப்பாக நகர்த்தப்படுகிறது.
சக்தி ராமேஷ்வரத்திற்கு சென்று தேவகி குறித்த உண்மைகளை திரட்டிக் கொண்டு வரும் வேளையில், குணசேகரன் அனுப்பிய ஆட்கள் வழிமறித்து சக்தியை கொலைச் செய்ய முயற்சிக்கிறார்கள்.

இவர்கள் பல முயற்சி செய்தும் சக்தியை நெருங்க முடியவில்லை. அதன் பின்னர் சக்தி கால்நடையாக நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது மர்ம கும்பல் ஒன்று சக்தியை கடத்திச் செல்கிறது. சக்தியை கடத்தியது குணசேகரன் அனுப்பிய ஆட்கள் மாதிரி தெரியாத நிலையில், ஒருவேளை ராணாவின் ஆட்களாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜனனியை பதற வைத்த மெசேஜ்
இந்த நிலையில், குணசேகரனிடம் ஜனனி, “ என்னுடைய சக்தியை என்ன பண்ணீங்க சொல்லுங்க..” என கேட்க, அவர் அதற்கு சரியாக பதில் கூறாமல் ஜனனியை மிரட்டி அனுப்புகிறார்.
ஒரு புறம் விசாலாட்சி புலம் கொண்டிருக்க, ஜனனி போனுக்கு ஒரு மெசேஜ் வருகிறது. அதில் சக்தி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இந்த மெசேஜை திறந்து பார்த்த ஜனனிக்கு தலை கால் புரியவில்லை.

பதறியடித்துக் கொண்டு குணசேகரனிடம் ஓடி வந்து சட்டையை பிடித்து நியாயம் கேட்கிறார். அதன் பின்னர், வீட்டிலுள்ளவர்களும் அந்த மெசேஜை பார்க்கிறார்கள். அவர்களுக்கும் எதுவும் புரியவில்லை. விசாலாட்சியும் தலையில் அடித்து கொண்டு அழுகிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |