Ethirneechal: காதலில் பொங்கி வழியும் ஜனனி, சக்தி... புலம்பும் நந்தினி, ரேணுகா
எதிர்நீச்சல் சீரியலில் புடவை எடுப்பதற்கு குந்தவையுடன் வந்த சக்தியை கோபத்தில் பேசிய ஜனனி, பின்பு காதலில் பொங்கி வழிந்ததுள்ளது நந்தினி, ரேணுகா புலம்பி தள்ளுகின்றனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது.
எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற தலைப்பில் இந்த சீரியல் ஒளிபரப்பாகிவரும் நிலையில், சீரியலில் சில மாற்றங்களை மட்டுமே செய்து வருகின்றனர்.
முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்திலும் வீட்டில் ஆண் ஆதிக்கம் தலையெடுத்து நிற்கின்றது. ஆனால் வீட்டு பெண்களும் தங்களால் முடிந்த அளவிற்கு போராடி வருகின்றனர்.
தற்போது மாமியாருக்காக மீண்டும் வீட்டிற்குள் வந்த நிலையில், குணசேகரன் தான் நினைப்பதை தம்பிகள் மூலமாக சாதித்து வருகின்றார்.
மணி விழாவிற்கு அனைவரும் சீர் செய்ய வேண்டியுள்ளதால், புடவை எடுப்பதற்கு நந்தினி, ரேணுகா, ஜனனி கடைக்கு வந்துள்ளனர்.
அத்தருணத்தில் சக்தியும் குந்தவையுடன் புடவை எடுக்க வந்த நிலையில், ஜனனி கோபத்தில் கொந்தளித்துள்ளார். பின்பு சமாதானம் ஆகி காதல் மழையை பொழிந்துள்ளனர்.
இதனை அவதானித்த நந்தினி மற்றும் ரேணுகா புலம்பி தள்ளுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |