Ethirneechal: துரத்தும் போலிஸ்... தங்க இடமில்லாமல் தவிக்கும் குணசேகரன்! தலைகீழாக மாறிய நிலை
எதிர்நீச்சல் சீரியலில் மருமகள்கள் தங்களது தொழிலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில், குணசேகரன் தங்குவதற்கு இடமில்லாமல் அலைந்து வருகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது மிகவும் சுவாரசியமாக செல்கின்றது. வீட்டு பெண்களை அடக்கி ஆண்ட குணசேகரன் தற்போது தலைமறைவாகி வருகின்றார்.
ஒருவழியாக சக்தியை மீட்டு கொண்ட ஜனனி, தனது மாமியாரிடம் நடந்த உண்மைகளைக் கூறி தங்களது பக்கம் இருக்கும் நியாயத்தினை புரிய வைத்துள்ளார்.

இதனால் மருமகள்களுக்கு முழு ஆதரவாக இருந்து வருகின்றார். ஜனனி ஹோட்டல் நடத்துவதற்கு வண்டி ஒன்றினை வாங்கி வைத்துள்ள நிலையில், இதனை சோதனை செய்வதற்கு அதிகாரிகள் வந்துள்ளனர்.
அனைத்தையும் சோதனை செய்துவிட்டு தங்களது முடிவினை கூறுவதற்கு தயாராகின்றனர். மற்றொரு புறம் குணசேகரன் பாண்டிச்சேரியில் தலைமறைவாக இருந்த நிலையில், தற்போது போலிசார் அவரை நெருங்கியுள்ளனர்.
இந்த தகவலை அவரது வக்கீல் கூறியதால், மீண்டும் காரில் ஊர் சுற்றி வருகின்றனர். பெண்களின் முன்னேற்றம் ஆரம்பமாகியுள்ள நிலையில், ராணாவின் எண்ட்ரி எப்போது இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |