Ethirneechal: துப்பாக்கி முனையில் குணசேகரன்! மகள் தாராவை வைத்து காய் நகர்த்தும் கதிர்
எதிர்நீச்சல் சீரியலில் கதிர் தனது மகளுக்கு போன் செய்து பேசிய நிலையில், தந்தைக்கு ஆதரவாக அப்பத்தாவிடம் வந்து தாரா பேசுகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையில், வீட்டில் உள்ள பெண்களை பழிவாங்க பல சதிகளை செய்தும் வருகின்றார்.
பெண்களை அடக்கி ஆண்டுவந்த குணசேகரன் தற்போது, பெண்களுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாமல் காணப்படுகின்றார்.

கடை திறப்பு விழாவை இறப்பு விழாவாக மாற்றுவதற்கு பல சதியை தம்பி கதிரை வைத்து செய்து வருகின்றார். இந்நிலையில் கதிர் தன் மீது இருக்கும் புகாரை திரும்ப பெறுவதற்கு தனது மகளை அம்மாவிடம் அனுப்பி வைத்துள்ளார்.
அப்பாவிற்கு ஆதரவாக தாரா அழுதுகொண்டு அப்பத்தாவிடம் பேசுகின்றார். மற்றொரு புறம் குணசேகரன் காரில் எஸ்கேப் ஆகும் பொழுது பொலிசார் தடுத்து நிறுத்தி துப்பாக்கி முனையில் அவரை பிடித்து வைத்துள்ளனர்.
விசாலாட்சியும் தாராவிடம் உங்க அப்பா செய்தது தவறு என்று கூறி வருகின்றார். ஜனனி தான் கடை திறப்பு விழாவில் மிகவும் உறுதியாக இருந்து வருகின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |