Ethirneechal: கதறியழுத நந்தினி... மசாலா பொடி ஆர்டர் என்ன ஆச்சு?
எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி தான் வாங்கிய முதல் மசாலா பொடி ஆர்டரை வெற்றிகரமாக முடித்து கொடுத்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.
ஆனால் பெண்கள் அனைத்து சவால்களையும் எதிர்த்து போராடி வருகின்றனர். இந்நிலையில் குணசேகரன் சிறையிலிருந்து வந்துள்ள நிலையில், வீட்டில் கதிரின் அராஜகம் அதிகரித்துள்ளது.
நந்தினி முதன்முதலாக தான் எடுத்த மசாலா பொடி ஆர்டரை வெற்றிகரமாக முடித்துள்ளார். ஒருபுறம் தொழில் போட்டியால் அழிக்க நினைத்தவர்களிடம் தப்பித்து, மற்றொரு வீட்டில் உள்ள ஆண்களிடமிருந்து தப்பித்து வெற்றி பெற்றுள்ளார்.
ஆர்டரை முடித்த உடன் அவர் கதறியழுதுள்ளார். சக வீட்டு பெண்கள் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். ஆர்டர் கொடுத்த நபரும் அடுத்த ஆர்டருக்கான காசோலையை வாங்கிக் கொள்ள கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |