Ethirneechal: கோபத்தில் கொந்தளித்த நந்தினி! பளார் என அறைந்த தருணம்
எதிர்நீச்சல் சீரியலில் அறிவுக்கரசி செய்த அடுத்தடுத்த சதியை முறியடித்துள்ள நிலையில், நந்தினி கோபத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் பெண்கள் விரும்பி பார்க்கும் சீரியலாக இருக்கின்றது. பெண்களை அடக்கி அதிகாரம் செய்த குணசேகரன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
குணசேகரன் கொடுக்க வேண்டிய குடைச்சல்களை வீட்டில் இருந்து கொண்டு அறிவுக்கரசி மற்றும் அவரது அண்ணன் இருவரும் கொடுத்து வருகின்றனர்.

இரண்டு முறை அறிவுக்கரசி செய்த சதி, எதிர்பாராத விதமாக தோல்வியில் முடிந்ததால் தற்போது வரை குடும்ப பெண்கள் ஹோட்டலை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
இதனால் ஆத்திரத்தில் வந்த நந்தினி பளார் என அறிவுக்கரசியின் அண்ணனை அடித்துள்ளார். மற்றொரு புறம் குணசேகரன் தனது வீட்டிற்கு தனது தம்பிகளை அனுப்பி வைத்து மனைவிகளை அடக்கி ஆள முயற்சி செய்கின்றார்.
குணசேகரனின் ஆட்டம் மேலும் பலிக்குமா? அறிவுக்கரசி மீண்டும் சிறைக்கு செல்வாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |