Ethirneechal: கலெக்டரை நேரில் சந்தித்த ஜனனி... அடங்காமல் இருக்கும் குணசேகரன் ஆட்டம்
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி தனக்கு உதவிசெய்த கலெக்டரை நேரில் சென்று பார்த்துவிட்டு, அவரது கடந்த கால கதையைக் கேட்கின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பெண்கள் விரும்பி பார்க்கும் சீரியலாக இருக்கின்றது. பெண்களை அடக்கி அதிகாரம் செய்த குணசேகரன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
வீட்டு மருமகள்கள் தாங்கள் நினைத்தது போன்று சமையல் தொழில் செய்யவும் ஆரம்பித்துள்ளனர். அதாவது இவர்களின் தொழிலுக்கு விசாலாட்சியும் முழு ஆதரவு தெரிவித்து தனக்கு தெரிந்த சமையல் ரகசியத்தினையும் கூறுகின்றார்.

இந்நிலையில் கடை திறப்பு விழாவினை நிறுத்த குணசேகரன் செய்துள்ள நிலையில், அனைத்தையும் தகர்த்து தனது வேலையில் சாதித்துள்ளனர் வீட்டு பெண்கள்.
இந்நிலையில் குணசேகரன் வட்டிக்கு விடும் நபர் ஒருவரின் பாதுகாப்பில் இருக்கும் நிலையில், ஜனனி தனக்கு உதவி செய்த கலெக்டரை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
ஒரு காலத்தில் சத்தமாக பேசுவதற்கு கூட பயந்த நான் இன்று இவ்வளவு தைரியமாக பேசுகிறேன் என்று தனது கதையினைக் கூறியுள்ளார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |