Ethirneechal: குணசேகரன் ஆட்களிடம் சிக்கிய ஜனனி! கட்டிப்போட்டு கொலை செய்ய திட்டம்
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி போலிசாரிடமிருந்து தப்பித்துள்ள நிலையில், தற்போது குணசேகரன் ஆட்களிடம் வசமாக சிக்கியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.
குணசேகரன் மீது போடப்பட்ட வழக்கிலிருந்து தப்பித்து தற்போது ஜாமீன் வாங்கியுள்ள நிலையில், ஜனனியுடன் வேலை செய்த அமுதா கொலை வழக்கில் ஜனனி போலிசாரிடம் சிக்கியுள்ளார்.

ஆனால் போலிசாருக்கு டிமிக்கு கொடுத்த ஜனனி எஸ்கேப் ஆகி தற்போது குணசேகரன் ஆட்களிடம் மாட்டிக் கொண்டுள்ளார். வீட்டில் உள்ள பெண்கள் குணசேகரன் குறித்த ஆதாரத்தினை தேடி வருகின்றனர்.
தற்போது கட்டிப்போடப்பட்டுள்ள ஜனனியை கொலை செய்யவும் திட்டம் போட்டுள்ளனர். மயக்கம் தெளிந்த ஜனனி தனது கட்டை அவிழ்த்து தப்பிப்பாரா? ராணாவிடம் குணசேகரன் சிக்குவாரா? என்றெல்லாம் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |