Ethirneechal: ஜனனியை எச்சரித்த கலெக்டர்... அடுத்த பிளானை அரங்கேற்றும் குணசேகரன்
எதிர்நீச்சல் சீரியலில் தன்னை கொலை செய்ய வந்த நபரிடமிருந்து ஜனனி உண்மையை தெரிந்து கொண்ட நிலையில், கலெக்டரிடமும் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் பெண்கள் விரும்பி பார்க்கும் சீரியலாக இருக்கின்றது. பெண்களை அடக்கி அதிகாரம் செய்த குணசேகரன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
வீட்டு மருமகள்கள் தங்களது முடிவில் உறுதியாக இருந்த நிலையில், ஹோட்டலையும் வெற்றிகரமாக திறந்துள்ளனர். ஆனால் குணசேகரன் ஆட்களை அனுப்பி அவர்களுக்கு இடையூறு செய்துள்ளார்.

ஆனால் ஜனனி தனது பாசத்தினால் அதனை முறியடித்துள்ள நிலையில், கலெக்டர் அவர் மீது புகார் கொடுக்கக் கூறியுள்ளார். ஆனால் ஜனனி புகார் வேண்டாம் மன்னித்து விட்டுவிடலாம் என்று கூறியுள்ளார்.
கலெக்டர் ஜனனியை எச்சரித்துள்ளார். மேலும் ஜனனி தன்னை கொலை செய்வதற்கு ஆட்களை அனுப்பியது குணசேகரன் கும்பல் என்பதையும் தெரிந்து கொண்டுள்ளார்.
அடுத்து குணசேகரனின் பழிவாங்குதல் எவ்வாறு இருக்கும்? ஜனனி எப்படி எதிர்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |