Ethirneechal: ஜனனியை பாத்ரூம் கழுவ வைத்த விசாலாட்சி... சிரிப்பை அடக்கமுடியாமல் குணசேகரன்
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியை வெளியே விடாமல் விசாலாட்சி பாத்ரூம் கழுவ வைத்துள்ள சம்பவம் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.
வீட்டிற்குள் அடங்கியிருந்த பெண்கள் சமீபத்தில் வீட்டைவிட்டு வெளியேறி போராடிய நிலையில், தற்போது மாமியாருக்காக மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
தம்பிகளை வைத்து குணசேகரன் வீட்டு மருமகள்களை பிரிக்க குணசேகரன் பிளான் போட்டுள்ள நிலையில், மீண்டும் பெண்களை சமையலறையில் அடைத்து ஆள்கின்றனர்.
ஆனால் ஜனனி மட்டும் இவர்களின் பிடியில் சிக்காமல் தனது வேலையை செய்து வருகின்றார். இதனால் குணசேகரன் ஜனனியையும் அடக்கி வீட்டிற்குள் இருக்க வைக்க விசாலாட்சியை தூண்டிவிட்டுள்ளார்.
விசாலாட்சியும் தனது சாமர்த்தியத்தால் ஜனனியை நிறுத்தி வைத்துள்ளதுடன், கடைசியில் அவரை பாத்ரூமையும் கழுவ வைத்துள்ளார்.
ஏற்கனவே சக்தியின் ஆதரவு இல்லாத ஜனனி இவர்களின் சூழ்ச்சியினை கண்டறிந்து தந்திரமாக தப்பிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |