Ethirneechal: பரோலில் வெளியே வரும் குணசேகரன்! ஜனனியின் ஹோட்டலில் நடந்த பேரதிர்ச்சி
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் மீதுள்ள குண்டாஸ் சட்டம் ரத்து செய்யப்பட்டு விரைவில் ஜாமீனில் வெளியே வருவதாக வழக்கறிஞர் கூறியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் பெண்கள் விரும்பி பார்க்கும் சீரியலாக இருக்கின்றது. பெண்களை அடக்கி அதிகாரம் செய்த குணசேகரன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
குணசேகரன் கொடுக்க வேண்டிய இடையூறுகளை திரும்பி வந்த அவரது தம்பி கதிர் மற்றும் ஞானம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் குணசேகரன் ஜாமீனில் வெளியே வர உள்ளதாக வழக்கறிஞர் கூறியுள்ளார்.

ஏற்கனவே வீட்டில் அனைவரையும் கொடுமை செய்து வரும் கதிர், அறிவுக்கரசிக்கு இந்த செய்தி மிகவும் சந்தோஷத்தை அளித்துள்ளது.
மேலும் கதிரின் செயலைப் பார்த்து தாரா நடுங்கிப் போயுள்ளார். ஜனனியின் ஹோட்டலில் புதிதாக வேலைக்கு சேர்ந்த பெண்ணைக் காணாமல் போலிசார் தேடி வந்துள்ளனர்.
மாடியில் சென்று சோதனை செய்த போது ஜனனி பேரதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெயரைக் கூறி பயங்கரமாக கதறியுள்ளார். அந்த பெண்ணை வைத்து ஜனனியின் ஹோட்டலுக்கு முடிவு கட்டியுள்ளார் குணசேகரன்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |