Ethirneechal: துணிந்து நின்ற பெண்கள்... ஆடிப்போன குணசேகரன், அறிவுக்கரசி
எதிர்நீச்சல் சீரியலில் அன்புக்கும், தர்ஷனுக்கும் திருமணம் செய்து வைப்பதற்கு குணசேகரன் மற்றும் அறிவுக்கரசி திட்டமிட்டுள்ள நிலையில், பெண்கள் அனைவரும் போலிசில் புகார் அளித்துள்ளனர்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குணசேகரன் தர்ஷனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளார். மற்றொரு புறம் வீட்டு பெண்களையும் ஹோட்டல் தொழில் செய்வதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அறிவுக்கரசியின் தங்கையை திருமணம் செய்ய மறுத்த தர்ஷன் அவர்களிடம் எஸ்கேப் ஆகி ஜீவானந்தத்திடம் சேர்ந்துள்ளார்.
அங்கு பார்கவி மற்றும் அவரது தந்தையும் இருந்த நிலையில், இதனை அறிந்த குணசேகரன் நாடகம் போட்டு அவர்களை வீட்டிற்கு வரவழைத்து, பார்கவியின் தந்தையை அடித்து கொலை செய்துள்ளனர்.
இந்நிலையில் குடும்ப பெண்கள் ஆவேசத்தில் பொங்கி எழுந்து, குணசேகரனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |