Ethirneechal: பார்கவியுடன் வீட்டிற்கே வந்த ஜீவானந்தம்... உச்சக்கட்ட கோபத்தில் குணசேகரன்
எதிர்நீச்சல் சீரியலில் ஞானம் சிறைக்கு சென்ற நிலையில் பார்கவி மற்றும் ஜீவானந்தம் இருவரையும் குடும்ப பெண்கள் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குணசேகரன் மீண்டும் தவறுக்கு மேல் தவறு செய்து வருகின்றார்.
பார்கவியின் தந்தையை கொலை செய்த வழக்கில் ஞானத்தை சிறைக்கு அனுப்பி வைத்த குணசேகரன், தற்போது எதிர்பாராத விதமாக பார்கவி அவரது வீட்டிற்கே வந்துள்ளார்.
பார்கவி மட்டுமின்றி அவருடன் ஜீவானந்தம் வந்த நிலையில், பார்கவி இங்கிருந்து அழைத்துச் செல்ல ஜீவானந்தத்திடம் கதறி அழுகின்றார்.
நந்தினி உனது இந்த நிலைக்கு எனது கணவர் தான் காரணம் அதனால் நான் உன்னை முழுவதுமாக பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
தற்போது பார்கவியை சமாதானப்படுத்தி பெண்கள் அவருக்கு துணையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |