Ethirneechal: ஜனனியின் ஹோட்டலுக்கு அடுத்த ஆப்பு... எப்படி சமாளிக்க போகின்றார்?
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியின் ஹோட்டலுக்கு உணவுத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ள காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் பெண்கள் விரும்பி பார்க்கும் சீரியலாக இருக்கின்றது. பெண்களை அடக்கி அதிகாரம் செய்த குணசேகரன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
வீட்டு மருமகள்கள் தங்களது முடிவில் உறுதியாக இருந்து, கடைசியாக ஹோட்டலையும் திறந்துள்ளனர். ஆனாலும் குணசேகரன் பல வழிகளில் அதனை தடுப்பதற்கு முயற்சி செய்து வந்த நிலையில், அனைத்தும் தோல்வியே அடைந்தது.

இந்நிலையில் அறிவுக்கரசி மற்றும் அண்ணன் இருவரும் சேர்ந்து சாப்பாட்டில் கரப்பான் பூச்சியை சேர்ப்பது போன்றும், உணவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்வது போன்றும் காணொளிகள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே விசாலாட்சி தான் குணசேகரன் தந்தையை திருமணம் செய்த கதையை வீட்டு மருமகள்களிடம் கூறியுள்ளார். கடைசியில் சீரியலில் குணசேகரன் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்வி இருந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |