Ethirneechal: கண்ணீர் விட்ட ஈஸ்வரி... பார்கவியால் உயிர் பிழைப்பாரா?
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவி யாருக்கும் தெரியாமல் வந்து ஈஸ்வரியை பார்த்துள்ள நிலையில், ஈஸ்வரி கண்ணீர் சிந்தி தனது உணர்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் எதிர்நீச்சல் சீரியல் தற்போது இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகிவருகின்றது. முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்திலும் ஆண்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர்.
இதில் நடிகை கனிகா ஈஸ்வரியாக நடித்து வரும் நிலையில், மகனின் திருமணம் குறித்து குணசேகரனிடம் பேச சென்ற போது வாய்தகராறு கைகலப்பாக மாறியுள்ளது.
குணசேகரன் ஈஸ்வரியின் கழுத்தை நெறித்து சுவற்றில் தலையை அடித்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த ஈஸ்வரியை மறுநாள் காலையில் நந்தினி வந்து பார்கின்றார்.
உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் காணப்படுகின்றார்.
பார்கவியின் வருகை
தர்ஷன் காதலித்த பெண் பார்கவி வெளிநாடு செல்வதற்கு விமானநிலையம் சென்ற நிலையில், தற்போது யாருக்கும் தெரியாமல் ஈஸ்வரியை பார்ப்பதற்கு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
இதுவரை உடலில் எந்தவொரு மாற்றமும் தெரியாமல் ஈஸ்வரியின் உடம்பில் பார்கவி வந்து பார்த்த போது மாற்றம் தெரிந்துள்ளது.
ஆம் பார்கவி ஈஸ்வரியை தொட்டதும் அவரது கண், கைகள் அசைய ஆரம்பித்ததுடன், ஈஸ்வரி கண்ணீர் மல்க தனது உணர்வுகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
