Ethirneechal: குணசேகரனுக்கு ஆதரவாக வந்த தர்ஷன்.... அதிர்ச்சியில் குடுத்பத்தினர்
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி நல்லபடியாக கடையை திறந்து வியாபாரம் செய்த நிலையில், குணசேகரன் தனக்கு ஆதரவாக தர்ஷனை இறக்கியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பெண்கள் விரும்பி பார்க்கும் சீரியலாக இருக்கின்றது. பெண்களை அடக்கி அதிகாரம் செய்த குணசேகரன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
வீட்டு மருமகள்கள் தாங்கள் நினைத்தது போன்று சமையல் தொழில் செய்யவும் ஆரம்பித்துள்ளனர். அதாவது இவர்களின் தொழிலுக்கு விசாலாட்சியும் முழு ஆதரவு தெரிவித்து தனக்கு தெரிந்த சமையல் ரகசியத்தினையும் கூறுகின்றார்.

இந்நிலையில் கடை திறப்பு விழாவினை நிறுத்த குணசேகரன் செய்த சதி அனைத்தையும் துவம்சம் செய்துவிட்டு ஜனனி கடையை சிறப்பாக திறந்து வியாபாரம் நடத்தினார்.
மகனுக்காக வீட்டில் இருந்த விசாலாட்சி பின்பு பொங்கி எழுந்து கடைதிறப்பு விழாவில் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் கடைசி ஆயுதமாக குணசேகரன் தர்ஷனை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
தர்ஷன் குணசேகரனுக்கு ஆதரவாக பேசிய நிலையில், விசாலாட்சி அதிர்ச்சியானதுடன், தர்ஷனை சத்தம் போடவும் செய்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |